வாழ்வியல்

மனச்சோர்வு, மறதி ஏற்படக் காரணம் மற்றும் அதற்கான தீர்வுகள்

  • October 28, 2025
  • 0 Comments

மனித உடலில் கோலின் (Choline) என்ற ஊட்டச்சத்து குறைவாக இருந்தால், பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் குறைபாடு காரணமாக அதிக சோர்வு, திடீர் மறதி அல்லது தசை பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மனிதனின் நரம்பு மண்டலம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு கோலின் (Choline) ஊட்டச்சத்து முக்கியமானது ஆகும். மனித உடல் சிறிதளவு கோலினை உற்பத்தி செய்தாலும், உணவு மூலமே இதன் பெரும்பான்மையான தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். […]

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் தற்போதைய நிலைமை தொடர்பில் வெளியான தகவல்

  • October 28, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய அணியுடன் சிட்னியில் நடந்த போட்டியில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அலெக்ஸ் கேரி (Alex Carey) அடித்த பந்தை ‘கேட்ச்’ செய்யும் போது இடறி விழுந்ததால், ஷ்ரேயாஸ் ஐயரின் இடது பக்க கீழ்ப்புற நெஞ்சுக் கூட்டில் பலத்த உள் காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு மண்ணீரலில் கிழிவு ஏற்பட்டுள்ளது எனவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது […]

இலங்கை

இலங்கை அரசியல் எதிர்காலம் ஆபத்தில் – பாதாளக் குழுக்கள் நுழைவது குறித்து எச்சரிக்கை

  • October 28, 2025
  • 0 Comments

போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாளக் குழு உறுப்பினர்கள் தேசிய அரசியலுக்குள் வருவதற்குத் திட்டமிட்டுள்ளனர். எனவே, இப்படியானவர்களுக்கு இடமளிப்பது தொடர்பில் கட்சிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். “போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். எதிர்காலத்தில் அவர்கள் தேசிய அரசியலுக்குள் வருவதற்கும் திட்டமிட்டுள்ளனர். எனவே, இவ்வாறானவர்களுக்குக் கட்சியில் அங்கத்துவம் வழங்கல், தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கல் என்பன தொடர்பில் கட்சிகள் அவதானத்துடன் செயற்பட […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் AI மீதான காதலால் ஆபத்துக்குள் மூழ்கும் இள வயதினர்

  • October 28, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலிகள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. YouGov மேற்கொண்ட புதிய ஆய்வின் முடிவுகள் குறித்து பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஆய்வின்படி, ஏழு பேரில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு செயலி மீது காதல் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். 18 முதல் 24 வயதுடையவர்களுக்கு இவ்வாறான காதல் உணர்வுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்தில் ஒருவர் AI […]

இலங்கை

இலங்கையில் எதிரணிகளின் கூட்டு சமர் – சஜித் அணி புறக்கணிப்பு!

  • October 28, 2025
  • 0 Comments

எதிரணிகளால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட எதிரணிகள் நேற்று கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தின. தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும், ஜனநாயகம் மற்றும் மக்களின் வாழும் உரிமையை பாதுகாக்குமாறு கோரியுமே இக்கூட்டம் ஏற்பாடு […]

இலங்கை

பாதாளக்குழு: தெற்குக்கு கறுப்பு புள்ளி: வடக்குக்கு வெள்ளையடிப்பு! – கடும் கோபத்தில் மஹிந்த அணி

  • October 28, 2025
  • 0 Comments

பாதாளகுழு விடயத்தில் தெற்குக்கு கறுப்பு முத்திரை குத்திவிட்டு, வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கையே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இடம்பெறுகின்றது என்று கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இவ்வாறு விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “ தெற்குக்கு கறுப்பு கரையை ஏற்படுத்திவிட்டு வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெறுகின்றது. பாதாள குழு, ஐஸ் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT பயனர்கள் மத்தியில் உளவியல் தாக்கம் – OpenAI வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

  • October 28, 2025
  • 0 Comments

ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில், உளவியல் தாக்கங்கள் அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உளவியல் தாக்கங்கள் மற்றும் மனநல நெருக்கடிகளைப் பற்றி பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தளமான ChatGPT-இடம் பகிர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல்களை OpenAI நிறுவனம் வெளியிட்டுள்ளது. OpenAI அளித்துள்ள தகவலின்படி, மொத்தப் பயனாளர்களில் 0.07% சதவீதமானவர்கள், தமக்குள்ள தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், பயம், பீதி (Anxiety) போன்ற தீவிரமான மனநலப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை ChatGPT உடன் பகிர்ந்து […]

உலகம்

மற்றுமொரு போரை முடிவுக்கு கொண்டு வரத் தயாராகும் அமெரிக்க ஜனாதிபதி

  • October 28, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலுக்கு விரைவான தீர்வைக் கொண்டு வருவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி, மற்றொரு போரின் முடிவைக் குறிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தான் அரசாங்க பிரதிநிதிகள் குழுவிற்கும் தலிபான் அரசாங்க பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த வார […]

ஐரோப்பா

பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு – டெலிகிராம் நிறுவனர் கருத்தால் சர்ச்சை

  • October 28, 2025
  • 0 Comments

பாரிஸ் லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட நெப்போலியன் காலத்து நகைகள் தொடர்பாக டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தெரிவித்த கருத்தால் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து பட்டப்பகலில் சுமார் 180 மில்லியன் யூரோ மதிப்புள்ள அரச நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, திருடப்பட்ட நகைகளை மீட்டு, அதை அருங்காட்சியகத்துக்கு மீண்டும் நன்கொடையாக வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு வழங்குவதில் […]

இலங்கை செய்தி

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • October 28, 2025
  • 0 Comments

வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கைத் தொழிலாளர்களின் சேமநலன்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மைக் கடமையென அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்காக, கூடுதலான அனுகூலங்களைத் தரக்கூடிய விசேட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படுமென அமைச்சர் கூறினார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட ஞாபகார்த்த முத்திரையின் முதல் நாள் உரையை வெளியிடும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. நீண்டகால உறுதிமொழியை […]

error: Content is protected !!