உலகம் செய்தி

சிங்கப்பூரில் இளம் யுவதியின் பொய்யான தகவலால் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

  • October 28, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் போலியான தகவல்களை வழங்கி முறைப்பாடு செய்த இளம் யுவதி ஒருவருக்கு நீதிமன்றம் நன்னடத்தை உத்தரவு விதித்துள்ளது. 20 வயதான கிளாரிஸ் லிங் மின் ருய் (Claris Ling Min Rui) என்ற யுவதிக்கு எதிராகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 மாத நன்னடத்தை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் குறித்த யுவதிக்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், லிங்கின் நன்னடத்தையை உறுதி செய்ய […]

உலகம் செய்தி

துருக்கியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • October 27, 2025
  • 0 Comments

துருக்கியின் மேற்கு பாலிகேசிர்(Balikesir) மாகாணத்தின் சிண்டிர்கி(Sindirki) மாவட்டத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் (AFAD) தெரிவித்துள்ளது. இஸ்தான்புல்(Istanbul) மற்றும் அருகிலுள்ள மாகாணங்களான புர்சா(Bursa), மனிசா(Manisa), இஸ்மிர்(Izmir) ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஹபர்துர்க்(Haberturk) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் சிண்டிர்கியில்(Sindirki) 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதில் ஒருவர் உயிரிழந்தார். 2023ம் ஆண்டு , துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

துருக்கியுடன் £8 பில்லியன் போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரித்தானியா

  • October 27, 2025
  • 0 Comments

துருக்கிக்கு £8 பில்லியன் ஒப்பந்தத்தில் 20 யூரோபைட்டர் டைபூன்(Eurofighter Typhoon) போர் விமானங்களை விற்க பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அங்காராவிற்கு(Ankara) விஜயம் செய்த பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர்(Sir Keir Starmer), இதை “பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு ஒரு வெற்றி, நமது பாதுகாப்புத் துறைக்கு ஒரு வெற்றி மற்றும் நேட்டோ பாதுகாப்பிற்கு ஒரு வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 20 டைபூன் போர் விமானங்களை வழங்குவது “நேட்டோ முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்தும், நமது இருதரப்பு […]

உலகம் செய்தி

மாலியின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

  • October 27, 2025
  • 0 Comments

இராணுவ ஆட்சிக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சமூக ஊடக பதிவில் ஒற்றுமையை வெளிப்படுத்திய மாலியின்(Mali) முன்னாள் பிரதமர் மௌசா மாராவுக்கு(Moussa Mara) ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2015 வரை எட்டு மாதங்கள் நாட்டின் அரசாங்கத்தை வழிநடத்திய மௌசா மாரா, அரசின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காகவும், சட்டப்பூர்வமான அதிகாரத்தை எதிர்த்ததற்காகவும் தலைநகர் பமாகோவில்(Bamako) உள்ள தேசிய சைபர் கிரைம் மைய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டார். மாராவுக்கு பரோல் இல்லாமல் ஒரு வருட சிறைத்தண்டனையும் 500,000 CFA […]

இலங்கை செய்தி

இலங்கையின் வெல்லம்பிட்டி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு

  • October 27, 2025
  • 0 Comments

இலங்கையின் மேற்கு மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வெல்லம்பிட்டி(Wellampitiya) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் சாலையில் கைக்குண்டு(hand grenade) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான ஒன்றைக் கண்டதாக வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்ததில் கைக்குண்டு பழையது மற்றும் வேலை செய்யும் நிலையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த இடத்திற்கு இந்த கைக்குண்டு […]

இந்தியா செய்தி

கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரிய நடிகர் விஜய்

  • October 27, 2025
  • 0 Comments

கடந்த மாதம் 27ம் திகதி தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின்(Tamilaga Vetri Kalagam) அரசியல் பேரணியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் குழந்தைகள் உட்பட 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று மகாபலிபுரத்தில்(Mahabalipuram) உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் […]

உலகம் செய்தி

தென் சீனக் கடலில் விபத்துக்குள்ளான இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள்

  • October 27, 2025
  • 0 Comments

தென் சீனக் கடலில் இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள் தனித்தனி சம்பவங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பசிபிக் கடற்படை(Pacific Fleet) தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய MH-60R சீ ஹாக்(Sea Hawk) ஹெலிகாப்டரின் மூன்று பணியாளர்களும், F/A-18F சூப்பர் ஹார்னெட்(Hornet) போர் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பசிபிக் கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு விபத்துகளுக்கான காரணங்கள் விசாரணையில் உள்ளன என்று பசிபிக் கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி […]

இந்தியா செய்தி

இந்தியாவில் சத் பூஜையை முன்னிட்டு குளிக்க சென்ற 6 பேர் மரணம்

  • October 27, 2025
  • 0 Comments

பீகாரின் பாகல்பூர்(Bhagalpur) மாவட்டத்தில் சத்(chhath) பண்டிகைக்கு முன்னதாக குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இஸ்மாயில்பூர்(Ismailpur) காவல் நிலையப் பகுதிக்குள் உள்ள நவ்டோலியாவில்(Navdolia) இந்த சம்பவம் நடந்ததாக நௌகாச்சியா(Naukachia) காவல்துறை அதிகாரி பிரேர்ணா குமார் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து சிறுவர்களும் 10-15 வயதுக்குட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து, பண்டிகையை முன்னிட்டு சோன்(Sone) நதியில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன இரண்டு பேரின் உடல்கள் ஜார்க்கண்டின் பலாமு(Palamu) மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளதாக […]

உலகம் செய்தி

54 ஹரியானா ஆண்களை இந்தியாவிற்கு நாடு கடத்திய அமெரிக்கா

  • October 27, 2025
  • 0 Comments

சட்டவிரோத வழியாக நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி, இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் OAE-4767 விமானம் மூலம் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-3ஐ வந்தடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில், 16 பேர் கர்னாலைச்(Karnal) சேர்ந்தவர்கள், 15 பேர் கைதாலைச்(Kaithal) சேர்ந்தவர்கள், 5 பேர் அம்பாலாவைச்(Ambala) சேர்ந்தவர்கள், 4 பேர் யமுனா(Yamuna) நகரைச் சேர்ந்தவர்கள், 4 பேர் குருக்ஷேத்ராவைச்(Kurukshetra) சேர்ந்தவர்கள், 3 பேர் ஜிந்த்(Jind), 2 […]

இந்தியா செய்தி

ராஜஸ்தானில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடைகளில் வேலை செய்ய தடை

  • October 27, 2025
  • 0 Comments

ராஜஸ்தான் அரசாங்கம், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியமர்த்துவதைத் தடை செய்யும் அவசரச் சட்டத்தை அங்கீகரித்துள்ளது. முதலமைச்சர் பஜன் லால் சர்மாவால்(Bhajan Lal Sharma) அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, குழந்தைகள் நலனை வலுப்படுத்துதல், சிறுவர்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் மாநில தொழிலாளர் சட்டங்களை தேசிய இணக்கம் மற்றும் பாதுகாப்பு தரங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முந்தைய ராஜஸ்தான் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 12 முதல் 15 […]

error: Content is protected !!