இலங்கை

கைவிரித்தார் சஜித்- கடுப்பில் மொட்டு கட்சி- மீண்டும் அழைப்பு!

  • October 28, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர(Janaka Wakkumbura) மேற்படி அழைப்பை விடுத்தார். நுகேகொடை கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள […]

இலங்கை

கிழக்கில் இந்தியாவின் 33 அபிவிருத்தி திட்டங்கள்: அமைச்சரவை ஒப்புதல்!

  • October 28, 2025
  • 0 Comments

இந்தியாவின் பல்துறைசார் நன்கொடையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 33 கருத்திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்றுவருகின்றது. இதன்போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு, ” இந்தியாவின் பல்துறைசார் அனுசரணையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் […]

உலகம்

92 வயதில் மீண்டும் ஜனாதிபதியான பால் பியா(Paul Biya) ; கேமரூனில்(Cameroon) வெடித்த போராட்டங்கள்

  • October 28, 2025
  • 0 Comments

ஆப்ரிக்க நாடான கேமரூனில்(Cameroon), உலகின் மிக வயதான அரச தலைவரான பால் பியா(Paul Biya), தனது 92 ஆவது வயதில், எட்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எனினும், இந்தத் தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் காமரூனை இரும்புக்கரம் கொண்டு ஆண்டு வரும் பால் பியா, 43 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், […]

இலங்கை

இலங்கையில் வாகனங்களுக்கான விலை வரம்புகளுக்கு அப்பால் அதிகரிக்கும்!

  • October 28, 2025
  • 0 Comments

வாகனங்களுக்கு 15 சதவீத வரி விதிக்க அரசாங்கம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள அனைத்து வாகன மாடல்களின் விலைகளும் கட்டுப்படியாகக்கூடிய வரம்புகளுக்கு அப்பால் அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மனேஜ் எச்சரித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், 2026 வரவு செலவு திட்டத்திற்கு பிறகு விலை உயர்வுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். அனைத்து நுகர்வு வரிகளையும் கழித்த பிறகு,  வாகனத்தின் மதிப்பின் அடிப்படையில் வாகன […]

பொழுதுபோக்கு

ரவி மோகனின் ‘BRO CODE’ படத்திற்கு அதிரடியாக தடை

  • October 28, 2025
  • 0 Comments

BRO CODE என்ற பெயரை திரைப்படத்துக்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘BRO CODE” என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்புக்கு எதிராக, இதே பெயரில் மதுபானம் தயாரித்து வரும் ‘இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ்’ என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் ரவி மோகனுக்கு சாதகமாக […]

உலகம்

30,000க்கும் அதிகமான அலுவலக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் அமேசான்(Amazon)

  • October 28, 2025
  • 0 Comments

அமேசான்(Amazon) நிறுவனம் அதன் 30,000க்கும் அதிகமான அலுவலக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொவிட்-19 காலகட்டத்தில் அமேசான் நிறுவனம் தேவையைவிடவும் அதிகமான ஊழியர்களை வேலைக்குச் சேர்த்ததாகவும் அதனால் தற்போது செலவுகளைக் குறைக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தில் மொத்தம் 1.55 மில்லியன் ஊழியர்கள் உள்ளனர். இருப்பினும் அவர்களில் 350,000 பேர் மட்டுமே அலுவலக ஊழியர்கள். அந்த அலுவலக ஊழியர்களில் தற்போது 10% பேர் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அமேசான் […]

இலங்கை

மாகாணசபைத் தேர்தலுக்கு சஜித் அணி தயார்: வெளியானது அறிவிப்பு!

  • October 28, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் விரைவில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு வலியுறுத்தினார் . இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தலை நடத்தலாம். அவ்வாறு இல்லையேல் தேர்தல் மேலும் இழுத்தடிக்கப்படக்கூடும். விரைவில் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு […]

ஐரோப்பா செய்தி

அல்பேனியாவில் உருவாக்கப்படவுள்ள 83 AI துணை அமைச்சர்கள்!

  • October 28, 2025
  • 0 Comments

உலகின் முதல் AI அமைச்சர் தற்போது 83 AI அமைச்சர்களை பிரசுவிக்க உள்ளதாக அல்பேனிய பிரதமர் தெரிவித்துள்ளார். பெர்லினில் (Berlin) பேசிய அல்பேனிய பிரதமர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டியாலா (Diella), விரைவில் 80க்கும் மேற்பட்ட AI குழந்தைகளைப் பெற்றெடுப்பார் என்றும், ஒவ்வொருவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு உதவுவார்கள் என்றும் தெரிவித்தார். அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பார்கள், என்றும் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு எதிர்வினையாற்றுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஊழலை எதிர்த்துப் போராடவும்,  ராமாவின் அமைச்சரவையில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் இடைத்தரகர்களால் உயரும் தேங்காய் விலை!

  • October 28, 2025
  • 0 Comments

தேங்காய் ஏலத்தில் 134 ரூபாய்க்கு வாங்கப்பட்ட தேங்காய்களை  180 ரூபாய்க்கு  விற்பதன் மூலம் இடைத்தரகர்கள் சுமார்  40-50 ரூபாய் வரை லாபம் ஈட்டுவதாக தேங்காய் சாகுபடி வாரியம் தெரிவித்துள்ளது. தேங்காய்களுக்கு கட்டுப்பாட்டு விலை இல்லாததே கிடங்கு சந்தை விலை உயர்வுக்கு காரணம் என்று வாரியத் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி கூறினார். நிலைமையை நிலைப்படுத்த குறைந்தபட்ச விலையில் தேங்காய் இருப்புக்களை சந்தைக்கு வெளியிடுமாறு இடைத்தரகர் வர்த்தகர்களை அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தேங்காய் சாகுபடி நிறுவனம், தேங்காய் […]

செய்தி

இலங்கையில் புதிய எதிர்க்கட்சி கூட்டணி உதயம்

  • October 28, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, மக்களின் குரல் என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணியை நேற்று உதயமாக்கிய நிலையில், அக்கூட்டணியால் அரசுக்கு எவ்விதச் சவாலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. “எதிர்க்கட்சி கூட்டணி குறித்து எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் அணிசேர்வது நல்லது. பின்னர், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை மக்கள் ஒரே குழுவாகத் தோற்கடிக்க முடியும்.” என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நேற்று உதயமான புதிய கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா […]

error: Content is protected !!