உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க தடைகளுக்கு பிறகு வெளிநாட்டு சொத்துக்களை விற்கும் ரஷ்ய எண்ணெய் நிறுவனம்

  • October 28, 2025
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லுகோயில்(Lukoil) தனது சர்வதேச சொத்துக்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. மாஸ்கோ(Moscow) தனது தாக்குதலை நிறுத்தாததால் விரக்தியடைந்ததாகக் கூறிய டிரம்ப், கடந்த வாரம் இரண்டு முன்னணி எண்ணெய் நிறுவனங்களான லுகோயில் மற்றும் ரோஸ்நெப்ட்(Rosneft) மீது தடைகளை விதித்தது. லுகோயில் 11 நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் பங்குகளைக் […]

இந்தியா செய்தி

புனேவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மென்பொருள் பொறியாளர் கைது

  • October 28, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் அல்-கொய்தா(Al-Qaeda) போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் பங்கு வகித்ததாகவும் கூறி, மகாராஷ்டிரா(Maharashtra) பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) புனேவில்(Pune) ஒரு மென்பொருள் பொறியாளரை கைது செய்துள்ளது. கடந்த மாதம் முதல் புனே பயங்கரவாத எதிர்ப்புப் படையின் கண்காணிப்பில் இருந்த 33 வயதான ஜுபைர் ஹங்கர்கேகர்(Zubair Hunkarkekar) இன்று கோந்த்வா(Gondwa) பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து, ஹங்கர்கேகரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் அல்-கொய்தா இலக்கியங்கள் மற்றும் தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. […]

உலகம் செய்தி

அமெரிக்கா-ஜெர்மனி விமானத்தில் இரண்டு இளைஞர்களை தாக்கிய இந்தியர் கைது

  • October 28, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து(Chicago) ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு(Frankfurt) புறப்பட்ட லுஃப்தான்சா(Lufthansa) விமானத்தில் இரண்டு இளைஞர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 28 வயது பிரணீத் குமார் உசிரிபள்ளி(Praneeth Kumar Usiripalli), 17 வயது பயணியின் தோளில் உலோக முள்கரண்டியால்(fork) குத்தி பின்னர் மற்றொரு 17 வயது இளைஞரைத் தாக்கி, அதே முள்கரண்டியால் அவரது தலையின் பின்புறத்தில் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து, விமானம் அமெரிக்காவின் பாஸ்டன் லோகன்(Boston Logan) சர்வதேச விமான […]

செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்

  • October 28, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், கடந்த வாரம் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடரை தொடர்ந்து நாளை கான்பெர்ராவில்(Canberra) உள்ள மனுக்கா ஓவல்(Manuka Oval) மைதானத்தில் முதலாவது T20 போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், முதலாவது போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா(Adam Zampa) […]

இந்தியா செய்தி

கரூர் சம்பவத்தை தொடர்ந்து புதிய நிர்வாகக் குழுவை அமைத்தார் விஜய்!

  • October 28, 2025
  • 0 Comments

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பணி முடங்கியிருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவரான விஜய் அண்மையில் மாமல்லபுரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று  தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய  நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார். நிர்வாகக் குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் விவரம் வருமாறு, 1. N. ஆனந்த் பொதுச்செயலாளர் 2. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் […]

உலகம் செய்தி

அவசரக் கூட்டத்தை கூட்டிய நெதன்யாகு – மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம்?

  • October 28, 2025
  • 0 Comments

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை ஹமாஸ் (Hamas)மீறுவதால் ஏற்படக்கூடிய எதிர்வினை குறித்து விவாதிக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu ) அவசரக் கூட்டத்தைக் கூட்டுவார் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. போர் நிறுத்த “மீறல்களுக்கு” பதில் அளிப்பது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்துடன் அவர் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பணயக்கைதிகளின் எச்சங்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸால் திருப்பி அனுப்பப்பட்ட பணயக்கைதியின் […]

உலகம்

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரேசில்(Brazil) சமூக வலைதள பிரபலம்

  • October 28, 2025
  • 0 Comments

பிரேஸிலில் இளம் அரசியல்வாதியும், சமூக வலைதள பிரபலமுமான பெர்னாண்டா ஒலிவேரா டா சில்வா(Fernanda Oliveira da Silva) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேஸிலின் சாவோ லூயிஸ்(São Luís) நகருக்கு அருகே உள்ள லாகோ வெர்டே பகுதியைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமான பெர்னாண்டா ஒலிவேரா டா சில்வா உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளைப் பகிர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அதேசமயம், கடந்த 2020ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று […]

இலங்கை

தேசிய புலனாய்வு பிரிவுக்கு புதிய தலைவராக ஜெனரல் நளிந்த நியமனம்

  • October 28, 2025
  • 0 Comments

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட(Nalinda Nyangoda) இன்று (28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவருக்குரிய நியமனக் கடிதம், பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவால் நேற்று வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே மேஜர் ஜெனரல் நியங்கொட இன்று ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை இராணுவத்தின் கவசப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நியங்கொட, இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக […]

உலகம் செய்தி

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல் – 14 பேர் பலி!

  • October 28, 2025
  • 0 Comments

அமெரிக்க இராணுவம் கடந்த திங்கட்கிழமையன்று பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நடத்திய தாக்குதலில் 14 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு கப்பல்களை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதல்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே உயிர் பிழைத்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) இன்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் பேரில், கிழக்கு பசிபிக் பகுதியில் போதைப்பொருள்  கடத்தல்காரர்கள் பயணித்ததாக கூறப்படும் நான்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. […]

இலங்கை

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5,467 பேர் கைது!

  • October 28, 2025
  • 0 Comments

2025 ஜனவரி முதல் இன்று வரை 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பங்கேற்றிருந்தார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “போதைப்பொருள் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மற்றும் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 2025 ஜனவரி முதல் இதுவரையில் 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். […]

error: Content is protected !!