இலங்கை

ரில்வின் சில்வா இந்தியாவுக்குப் பயணம் – இராஜதந்திர நகர்வில் புதிய அத்தியாயம்

  • November 9, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கிய இணையதளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரில்வின் சில்வா அண்மையில் மூன்று வாரங்கள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றிருந்தார். அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி இருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்தியா செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. புதுடெல்லி விஜயத்தின்போது அந்தநாட்டு அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

  • November 9, 2025
  • 0 Comments

புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தும் ஒரு நோயெதிர்ப்பு சிகிச்சை முறையை விக்டோரியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. இந்தப் புதிய முறை, புற்றுநோயாளிகளின் இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட நோயெதிர்ப்பு செல்களைப் பயன்படுத்தி, புற்றுநோய் செல்களை அடையாளம் காணவும், குறிவைக்கவும், அழிக்கவும் சிறப்பாக மாற்றியமைக்கப்படுகிறது. டீலி ஆராய்ச்சி மையத்தின் தலைமையிலான இந்த சோதனை, மீசோதெலின் எனப்படும் புரதத்தை குறிவைத்து, உடலின் தேவையற்ற பாகங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சிகிச்சையளிக்க வடிவமைக்கப்பட்ட CAR-T செல்களை உருவாக்கி வருகிறது. […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் – உடனடியாக நாடு கடத்துமாறு உத்தரவு

  • November 9, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் சிரியாவை சேர்ந்தவர்கள் தஞ்சம் கோருவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். சிரியாவை சேர்ந்த குற்றவாளிகளை முதலில் நாடு கடத்த அரசாங்கம் ஏற்கனவே தயாராகி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் விவாதிக்க சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாராவை ஜெர்மனிக்கு அழைத்ததாகவும் மெர்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமீபத்தில் சிரியாவுக்கு விஜயம் செய்த வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் மெர்ஸின் கருத்துடன் உடன்படவில்லை. சிரியா இன்னும் பாதுகாப்பற்றது என்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

ChatGPT பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – அமெரிக்காவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • November 9, 2025
  • 0 Comments

ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ChatGPT மீது அமெரிக்காவில் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ChatGPT பயனர்கள் சிலரை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில், இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓபன் ஏ.ஐ., நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ChatGPT தற்கொலைக்கு தூண்டியதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சமூக வலைத்தளத்தால் பாதிக்கப்பட்டோர் […]

இலங்கை

வெளிநாடு ஒன்றில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

  • November 9, 2025
  • 0 Comments

மலேசியாவின் கோலாலம்பூரில் இலங்கை இளைஞர் ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து காலை 8.40 அளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டபோது, கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்த 26 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த தொடர்மாடி குடியிருப்பின் இரண்டாம் […]

ஐரோப்பா

விண்வெளியைக் காக்கும் ஐரோப்பா – பூமியின் சுற்றுவட்டப் பாதையை சுத்தம் செய்ய திட்டம்

  • November 9, 2025
  • 0 Comments

விண்வெளியில் அதிகரித்து வரும் விண்வெளிக் குப்பைகளை அகற்றி, எதிர்கால விண்வெளிப் பயணங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒரு முன்னோடித் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, குப்பைகளை சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விண்கலத்தை ஐரோப்பா அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. க்ளியர்ஸ்பேஸ்-1 (ClearSpace-1) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், விண்வெளியில் செயல்படாத செயற்கைக்கோள் துண்டுகளைப் பிடித்து அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு விண்வெளிக் குப்பையை இயந்திரக் கைகளைப் பயன்படுத்திப் பிடித்து அப்புறப்படுத்தும் முதல் முயற்சியாக இது […]

இலங்கை

இலங்கையில் வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • November 9, 2025
  • 0 Comments

இலங்கையில் வாகனங்களின் விலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர். சமூகப் பாதுகாப்பு வரியால் இவ்வாறு விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் சுமார் 250,000 ரூபாய் அல்லது இரண்டரை சதவீதம் அதிகரிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, நாட்டின் நிதி இலக்குகள் அடையப்பட்டதற்கு, எதிர்பாராத வகையில் நிகழ்ந்த வாகன இறக்குமதியே முதன்மையான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் […]

உலகம் முக்கிய செய்திகள்

அதிகரித்து வரும் நெருக்கடி – ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற தயாராகும் இளைஞர்கள்

  • November 9, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு விலைகள் மற்றும் வாடகைகள் காரணமாக பல இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி சிந்தித்து வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த விடயம் ஹோம் இன் பிளேஸ் (Home in Place) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 18 முதல் 35 வயதுடைய ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலிவான வீடுகளுக்காக வெளிநாடு செல்வது குறித்து சிந்தித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில் 16 சதவீதமானோர் நிச்சயமாக வேறு நாடுகளுக்கு செல்ல […]

ஐரோப்பா

பாரிஸிலுள்ள லூவர் அருங்காட்சியகத்தின் கொள்ளை – பின்னணி குறித்த வெளியான அதிர்ச்சித் தகவல்

  • November 9, 2025
  • 0 Comments

பிரான்ஸில் தலைநகர் பாரிஸில் நடந்த பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பான பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பிரபல லூவர் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பெறுமதியான ஆபரணங்கள், யூரோ என்பனவற்றை களவாடி இருந்தனர். பாதுகாப்புமிக்க லூவர் அருங்காட்சியகத்திற்குள் அதிநவீன சிசிடிவி பாதுகாப்பு அமைப்பின் பலவீனமே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையர்கள் சிசிடிவி கட்டமைப்பின் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. Wi-fiயின் கடவுச்சொல் வெறும் “Louvre” என்று இருந்ததாக வெளியான தகவல் தொழில்நுட்ப துறையினரை […]

உலகம் செய்தி

உக்ரைன், காசா ஒப்பீடு – சர்ச்சைக்குரிய கேள்வியால் வேலையிழந்த ஊடகவியலாளர்

  • November 9, 2025
  • 0 Comments

காசா பகுதியின் புனரமைப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடம் கேள்வி எழுப்பியதற்காக ஊடகவியலாளர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் முன்னணி செய்தி நிறுவனமான அஜென்சியா நோவா, அதன் ஊடகவியலாளரை  பணிநீக்கம் செய்துள்ள இந்தச் சம்பவம் தற்போது இத்தாலியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேப்ரியல் நுன்சியாட்டி என்பவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் 13 ஆம் திகதி நடந்த ஐரோப்பிய ஒன்றிய செய்தியாளர் சந்திப்பில் குறித்த ஊடகவியலாளர் கேள்வியைக் எழுப்பியுள்ளார். அதில், “உக்ரைன் புனரமைப்புக்கு ரஷ்யா இழப்பீடு […]

error: Content is protected !!