பொழுதுபோக்கு

“அரோராவுடன் நெருக்கமாக இருந்தேன்” எலிமினேஷனுக்கு பிறகு மனம் திறந்த துஷார்

  • November 12, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி 35 நாட்களை கடந்து விட்டது. இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு தருவதை விட எதிர்ப்புகள் தான் அதிகம். பல ரிய போட்டியாளர்களை இறக்கியதுதான் காரணம். ஒருமுறையும் இல்லாதவாறு இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி போராட்டமும் இடம்பெற்றது. என்ன தான் விமர்சனங்கள் வந்தாலும், இதற்கு மத்தியில் பிக்பாஸிற்கு என்று தனி ஆடியன்ஸும் இருக்கின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட்டான துஷார் நேர்காணல் ஒன்றில் பிக்பாஸ் வீடு […]

உலகம் செய்தி

சிங்கப்பூர் விமானப் பயணிகளுக்கு முக்கிய தகவல்! அடுத்தாண்டு முதல் அமுலுக்கு வரும் புதிய வரி

  • November 12, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் அடுத்தாண்டு முதல் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பசுமை எரிபொருள் வரியைச் (Green Fuel Levy) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கில் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விற்பனை செய்யப்படும் விமான டிக்கெட்டுகளில், இந்த நிலையான விமான எரிபொருள் வரிக்கான கட்டணம் அறிவிடப்படவுள்ளது. அத்துடன் இந்த நடைமுறை அடுத்தாண்டு அக்டோபர் முதலாம் திகதி […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பேரழகி வியானா… மயக்க வைக்கும் புகைப்டங்கள்

  • November 12, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக சமூக வலைதள பிரபலங்கள் கலந்து கொண்டதால் கடும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும் சர்ச்சைக்குரிய பல போட்டியாளர்கள் சென்றுள்ளதால், வம்புக்கும், கன்டன்டுக்கும் பஞ்சமில்லாமல் செல்கின்றது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை வெளியில் தெரியாமல் இருந்த போட்டியாளர் வியானா தற்போது தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். யார்ரா அந்த பையன் டாஸ்கில் வியானா மிகவும் தைரியமாக தனது கருத்துகளை பகிர்ந்தார். இந்த நிலையில், வியானா என்னதான் […]

ஐரோப்பா

சீர்குலையும் உக்ரைன் – புட்டினுக்குக் கடும் அழுத்தம் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை

  • November 12, 2025
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை இணங்க வைக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அனிதா ஹிப்பர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அதனை நிறுத்த உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இவ்வாறான நிலையில், உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்தும் தாக்குதல் […]

இலங்கை

ஆண்டுக்கு 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி – ஆபத்து குறித்து எச்சரிக்கும் இலங்கை அமைச்சர்

  • November 12, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தப் பிளாஸ்டிக் உற்பத்தி சுற்றுச்சூழல் மாசுபாடு, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் (Water’s Edge) வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முறையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

  • November 12, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சென்ற போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஐரோப்பா

ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கி விமானம் – 20 பேர் பலி

  • November 12, 2025
  • 0 Comments

அசர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த துருக்கி விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்திலிருந்த 20 பேரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கியின் C-130 ரக இராணுவச் சரக்கு விமானம் ஒன்றே இதன் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்து & பகுப்பாய்வு

செவ்வாயில் மனிதர்கள் உயிர் வாழலாம்! மர்மங்கள் நிறைந்த பல தகவல்கள் கண்டுபிடிப்பு

  • November 12, 2025
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தில் மறைந்துள்ள பல மர்மங்கள் நிறைந்த தகவல்களை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் கண்டுபிடித்துள்ளது. அதற்கமைய, செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ பள்ளத்தில் (Jezero Crater) கண்டுபிடிக்கப்பட்ட 24 வகையான கனிமங்கள், செவ்வாய் கிரகத்தின் கடந்த கால வரலாறு குறித்த ஆச்சரியமிக்க தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளன. ஒரு காலத்தில் உயிர்கள் வாழத் தகுதியான நீலக் கிரகமாக இருந்த செவ்வாய், காலப்போக்கில் 3 வெவ்வேறு  அவதாரங்களை எடுத்துள்ளமை, இந்தக் தரவுகளைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ரோவர் அனுப்பிய தரவுகளை […]

உலகம்

ஆப்கானிஸ்தான் செல்வதை தவிர்க்கவும் – ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கடுமையான எச்சரிக்கை!

  • November 12, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமகாலத்தில் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ராவெல்லர் (Smartraveller) வலைத்தளம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆலோசனையில், ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் போது பயங்கரவாதத் தாக்குதல்கள், கடத்தல்கள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக் காவல் போன்ற கடுமையான ஆபத்துகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே, ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்ய நம்பகமான முகவர்களிடம் கூட முன்பதிவு செய்யக்கூடாது என்று ஸ்மார்ட்ராவெல்லர் […]

இலங்கை

இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் மருத்துவவர்கள்

  • November 12, 2025
  • 0 Comments

இலங்கையில் நவம்பர் 17ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கத் தவறியதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதன் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த முடிவு இடம்பெற்றுள்ளது. அதற்கமைய, சுகாதார நிலையங்களில், மருத்துவமனைகளுக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய மருந்துகளுக்கான மருந்துச் சீட்டுகளை வழங்குவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டு வரவு […]

error: Content is protected !!