இலங்கை

இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் மருத்துவவர்கள்

  • November 12, 2025
  • 0 Comments

இலங்கையில் நவம்பர் 17ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கத் தவறியதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதன் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த முடிவு இடம்பெற்றுள்ளது. அதற்கமைய, சுகாதார நிலையங்களில், மருத்துவமனைகளுக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய மருந்துகளுக்கான மருந்துச் சீட்டுகளை வழங்குவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டு வரவு […]

உலகம்

150 ஆண்டுகள் வாழத் தயாராகும் சீன, ரஷ்ய தலைவர்கள்! சீனாவில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

  • November 12, 2025
  • 0 Comments

மனிதர்களின் ஆயுளை அதிகரிப்பது தொடர்பான ஆய்வுகளைச் சீனா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளுக்கு பில்லியன் கணக்கான டொலர்களைச் சீன அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வயதெல்லையை 150 ஆண்டுகள் வரை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஆய்வுகள் மூலம் பெற்றுள்ளதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனித ஆயுளை மாற்றும் நடவடிக்கையில் ஷென்சென்னில் உள்ள லாங்வே பயோசயின்ஸ் (Longway Bioscience) என்ற முன்னணி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மனிதர்களின் வயதை […]

உலகம்

ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடை விதிக்கத் திட்டம்

  • November 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது திருநங்கைகள் பங்கேற்பதற்குத் தடை விதிப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு ஆலோசித்து வருகிறது. 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் திருநங்கைப் போட்டியாளர்கள் பங்கேற்க முழுமையாகத் தடை விதிப்பது குறித்து ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரியின் (Kirsty Coventry) தலைமையில் இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. திருநங்கைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பெண்களுக்கான மருந்தினால் சர்ச்சையில் சிக்கியுள்ள அமெரிக்க ஜனாதிபதி

  • November 12, 2025
  • 0 Comments

பெண்கள் பயன்படுத்தும் மருந்து தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டை மருத்துவ ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர். டைலெனால் அல்லது பாராசிட்டமால் என்ற மருந்தை கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தக் கூடாத, இதனால் நரம்பியல் வளர்ச்சி கோளாறுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். எனினும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவ்வாறான எந்தவொரு பாதிப்பும் இல்லையென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் டைலெனால் மருந்தை பயன்படுத்துவது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானது என தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தில் அடுத்த ஆண்டு ஏற்படவுள்ள மாற்றம்

  • November 12, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் அடுத்த வருடத்திலிருந்து குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கு ஜெர்மன் கூட்டாட்சி அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குறைந்தபட்ச ஊதியம் மணிநேரத்திற்கு 12.82 யூரோவிலிருந்து 13.90 யூரோவாக அதிகரிக்க உள்ளது. மேலும், ஜனவரி 2027 ஆம் ஆண்டில் இது மணிநேரத்திற்கு 14.60 யூரோ உயரும். 2015 இல் குறைந்தபட்ச ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவே மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும். தொழிற்சங்கங்கள், தொழில் வழங்குநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குறைந்தபட்ச ஊதிய ஆணையத்தின் பரிந்துரையின் […]

செய்தி விளையாட்டு

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி

  • November 11, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில்(Rawalpindi) மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர்(Ron Dermer) பதவி விலகல்

  • November 11, 2025
  • 0 Comments

காசா போரின் போது பேச்சுவார்த்தைகளில் முன்னணிப் பங்காற்றியவரும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்(Benjamin Netanyahu) நெருங்கிய நம்பிக்கையாளருமான இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர்(Ron Dermer) பதவி விலகியுள்ளார். “மூலோபாய விவகார அமைச்சர் பதவியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எனது முடிவை உங்களுக்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன் ” என்று டெர்மர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து அந்த கடிதத்தில், 2022ம் ஆண்டு டிசம்பரில் அரசாங்கத்தில் சேர்ந்தபோது தனது குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அமைச்சராக […]

உலகம் செய்தி

மலேசியா அருகே மியான்மர் குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

  • November 11, 2025
  • 0 Comments

தாய்லாந்து-மலேசியா(Thai-Malaysia) எல்லைக்கு அருகே மியான்மரிலிருந்து(Myanmar) வந்த நூற்றுக்கணக்கான குடியேறிகளின் படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியவர்களின் 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மரின் ராக்கைன்(Rakhine) மாநிலத்திலிருந்து புறப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மலேசியாவின் லங்காவி(Langkawi ) தீவுக்கு வடக்கே மற்றும் தாய்லாந்தின் கோ தருடாவோ(Ko Tarutao) தீவுக்கு அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 300 பேருடன் புறப்பட்ட கப்பல் மலேசியாவை நெருங்கியதும் பயணிகள் மூன்று சிறிய […]

இந்தியா செய்தி

டெல்லி விமான நிலையத்தில் போலி வேடமணிந்து போதைப்பொருள் கடத்த முயன்ற பெண் கைது

  • November 11, 2025
  • 0 Comments

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(Delhi’s Indira Gandhi International Airport), தாய்லாந்திலிருந்து(Thailand) வந்த ஒரு பெண், தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரி என்று தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றபோது கைது செய்யப்பட்டுளளார். மேலும், அவரது உடைமைகளை சோதனை செய்ததில் 11.350 கிலோகிராம் எடையுள்ள 20 ஹைட்ரோபோனிக் கஞ்சா (hydroponic weed) பொதிகள் மீட்கப்பட்டன. விசாரணையின் போது, ​​அந்தப் பெண் விமான நிலைய கழிப்பறைக்குள் சென்று, தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய சின்னம் […]

உலகம் செய்தி

சிரியாவில் தேசிய அருங்காட்சியகத்தில் ஆறு பண்டைய ரோமானிய சிலைகள் கொள்ளை

  • November 11, 2025
  • 0 Comments

சிரிய தலைநகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குள் திருடர்கள் நுழைந்து, ரோமானிய(Roman) காலத்தைச் சேர்ந்த பல பழங்கால சிலைகளைத் திருடிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்ளை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டமாஸ்கஸின்(Damascus) தேசிய அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரிலிருந்தும், கடந்த ஆண்டு 54 ஆண்டுகால அசாத் குடும்ப ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு ஜனவரி மாதம் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தில், சிரியாவின் நீண்ட வரலாற்றைச் சேர்ந்த விலைமதிப்பற்ற தொல்பொருட்கள் உள்ளன. ரோமானிய காலத்தைச் […]

error: Content is protected !!