ஐரோப்பா

ஜெர்மனியில் வேலை இழப்பு அபாயம்: மூன்றில் ஒரு நிறுவனம் ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்

  • November 13, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் உள்ள மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள், 2026ஆம் ஆண்டில் வேலைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் பொருளாதார நிறுவனத்தின் (German Economic Institute) புதிய அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,000 நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில், 38 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைக்க விரும்புவதாகத் தெரியவந்துள்ளது. அதே சமயம், 18 சதவீத நிறுவனங்கள் மட்டுமே அடுத்த ஆண்டு அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ளன. 2026ஆம் ஆண்டில் பல வணிகங்கள், குறைவாகச் செலவு செய்து உற்பத்தி நடவடிக்கைகளில் […]

உலகம் செய்தி

முக்கிய கூட்டத்தில் உறங்கிய ட்ரம்ப் – பைடனுக்கு பட்டப்பெயர் வைத்தவருக்கு நேர்ந்த கதி

  • November 13, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது உறங்கிய நிலையில் காணப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டங்களில் எடை குறைப்பு மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சியின்போதே ட்ரம்ப் இவ்வாறு லேசாக உறங்கிய சம்பவம் கமராவில் பதிவாகியுள்ளது. இதை “லேசாக அசந்த நேரம்” என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ட்ரம்பிற்கு “The Nodfather” (தூக்க தந்தை) என கலிபோர்னியா ஆளுநர் கவின் […]

உலகம் செய்தி

சிறையில் அடைக்கப்பட்ட பிரெஞ்சு-அல்ஜீரிய எழுத்தாளரை விடுவிக்க அனுமதி

  • November 12, 2025
  • 0 Comments

தேசிய ஒற்றுமையை சீர்குலைத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட பிரெஞ்சு-அல்ஜீரிய(French-Algerian) எழுத்தாளர் பவுலெம் சான்சலுக்கு(Boualem Sansal) மன்னிப்பு வழங்குவதாக அல்ஜீரியாவின் ஜனாதிபதி அறிவித்துள்ளார். 81 வயதான நாவலாசிரியரின் வயது மற்றும் மோசமான உடல்நலம் காரணமாக அவரை விடுவிக்குமாறு ஜெர்மன்(Germany) ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர்(Frank-Walter Steinmeier) வலியுறுத்தியதற்கு பின்னர் இந்த விடுவிப்பு வந்துள்ளது. இந்நிலையில், மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, பவுலெம் சான்சால் மருத்துவ சிகிச்சைக்காக பெர்லினுக்கு(Berlin) அழைத்து செல்லப்பட்டுள்ளார் பிராங்கோஃபோன்(francophone) வட ஆபிரிக்க இலக்கியத்தில் பரிசு பெற்ற பவுலெம் சன்சால் அல்ஜீரிய […]

இந்தியா செய்தி

டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக அறிவிப்பு

  • November 12, 2025
  • 0 Comments

இந்த வாரம் டெல்லியில் பலரைக் கொன்ற கார் குண்டுவெடிப்பை பயங்கரவாதத் தாக்குதல் என்று இந்தியா தெரிவித்துள்ளது. “தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவத்தை நாடு கண்டுள்ளது,” என்று பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அமைச்சரவை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், குற்றவாளிகள் அவர்களின் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான செங்கோட்டை பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த […]

இந்தியா செய்தி

குஜராத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இருவர் மரணம் – 20 பேர் காயம்

  • November 12, 2025
  • 0 Comments

குஜராத்தின் பருச்(Bharuch) மாவட்டத்தில் உள்ள ஒரு மருந்து தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் காயமடைந்ததுள்ளனர். “வெடிப்பின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் தொழிற்சாலை கட்டமைப்பு இடிந்து விழுந்தது. பெரும்பாலான தொழிலாளர்கள் தப்பிக்க முடிந்தது, அவர்களில் இருவர் சிக்கி இறந்தனர். தீ அணைக்கப்பட்ட பிறகு அவர்களின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன” என்று பருச் மாவட்ட ஆட்சியர் கவுரங் மக்வானா(Gaurang Makwana) குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் வெடிப்பிற்கான […]

இலங்கை செய்தி

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய ஆலோசனை

  • November 12, 2025
  • 0 Comments

காலி(Galle) சிறைச்சாலையை அதன் தற்போதைய இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின் இணைத் தலைவர் நலின் ஹேவகே(Nalin Hewage), அதிக வணிக மதிப்பைக் கொண்டுள்ள சிறைச்சாலை அமைந்துள்ள நிலம் காலி நகரத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் செயல்முறை நிறுத்தப்பட்டு டிஜிட்டல் முறையில் நடைபெறும் எனவே, சிறைச்சாலை சற்று தொலைவில் அமைந்திருந்தாலும், அது ஒரு பெரிய பிரச்சினையாக […]

உலகம் செய்தி

கனடாவில் இந்திய மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் இடையே சந்திப்பு

  • November 12, 2025
  • 0 Comments

கனடாவில் நடைபெற்ற ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்(Jaishankar) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன்(Marco Rubio) இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தேசிய தலைநகரில் நடந்த செங்கோட்டை(Red Fort) கார் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், “இன்று ஜி7 கூட்டத்தில் மார்கோ ரூபியோவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு அவர் […]

இந்தியா செய்தி

ஆந்திராவில் 20 வயது பொறியியல் மாணவர் தற்கொலை

  • November 12, 2025
  • 0 Comments

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம்(Srikakulam) மாவட்டத்தில் உள்ள எட்செர்லாவில்(Etcherla) உள்ளூர் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பி.ஸ்ருஜன் என அடையாளம் காணப்பட்ட இளைஞன் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ரீகாகுளம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.வி. மகேஸ்வர ரெட்டி குறிப்பிட்டுள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் கொண்ட ஸ்ருஜன் அதிக மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், இந்த மரணம் […]

பொழுதுபோக்கு

ராஜமவுலி படத்தில் பிரியங்கா சோப்ராவின் புதிய போஸ்டர் வெளியானது

  • November 12, 2025
  • 0 Comments

‘ஆர்ஆர்ஆர்’ என்ற பிரம்மாண்டமான படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இந்த நிலையில், பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் 15-ம் திகதி பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது. இந்த […]

உலகம் செய்தி

தெற்கு பெருவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 37 பேர் உயிரிழப்பு

  • November 12, 2025
  • 0 Comments

பெருவில்(Peru) ஒரு பேருந்து லாரியுடன் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 37 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 24 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிராந்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தெற்கு பெருவில் உள்ள அரேக்விபாவில்(Arequipa) நடந்த விபத்து, தென் அமெரிக்க நாட்டில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். லாமோசாஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பேருந்து, காரவேலி(Caravel) மாகாணத்தில் உள்ள சாலா(Sala) என்ற நகரத்திலிருந்து அரேக்விபாவுக்குச்(Arequipa) 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக அரேக்விபாவின் […]

error: Content is protected !!