இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரி எங்கே?

  • November 15, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. குறித்த நபர் கைது செய்யப்பட்டுவிட்டாரா? என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா தொடுத்தார். இது தொடர்பில் சஜித் மேலும் கூறியவை வருமாறு, “ பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பிறந்த நாள் இன்றாகும். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். […]

இலங்கை செய்தி

500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசிக்கும் துணை அமைச்சர் – சிக்கலில் ஆளும்கட்சி!

  • November 15, 2025
  • 0 Comments

ஆளும் கட்சியின் துணை அமைச்சர் ஒருவர்  500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார் என்றும், அதை அவருக்கு யார் நன்கொடையாக அளித்தார்கள் என்றும் எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆளும் கட்சியினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்படி கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நீதிமன்ற வழக்குகளுக்காக […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் பறவை காய்ச்சலுடன் சற்று வேறுபட்ட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்!

  • November 15, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் முதல் முறையாக  பறவைக் காய்ச்சலுடன் சற்று வேறுப்பட்ட  தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபர் ஒருவர்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாஷிங்டன் மாநில சுகாதார அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர். தொற்றுக்குள்ளான குறித்த நபர் நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து வைத்திய கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபருக்கு அதிக காய்ச்சல், குழப்பம் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதாகவும் மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான நபரின் இரத்த பரிசோதனையில் பொதுவாக பறவைகள் மத்தியில் பரவும் H5N1 வைரஸ் தொற்றில் இருந்து […]

இலங்கை செய்தி

கொலை குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

  • November 15, 2025
  • 0 Comments

16 வயது பாடசாலை மாணவியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 27 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் தொழில் புரிந்த குறித்த இளைஞர் நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார். இவரின் காதலி எனக் கூறப்படும் குறித்த 16 வயது சிறுமி தங்கி இருந்த அறைக்கு சென்று கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் எனக் […]

பொழுதுபோக்கு

சுந்தர் சி விலகியதற்கான காரணத்தை போட்டுடைத்தார் கமல்

  • November 15, 2025
  • 0 Comments

பெரும் எதிர்பார்பார்ப்பை ஏற்படுத்தியது தான் ரஜினி – கமல் – சுந்தர் சி கூட்டணி. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் சுந்தர் சி இந்த கூட்டணியில் இருந்து விலகினார். இந்த நிலையில், ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் சுந்தர்.சி நிராகரித்தது ஏன் என்பதற்கு தயாரிப்பாளர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். “எனது தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியது குறித்து அவர் கருத்து தெரிவித்துவிட்டார். எனது கருத்து என்னுடைய நட்சத்திரத்திற்கு […]

இந்தியா செய்தி

காஷ்மீரில் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களால் ஏற்பட்ட பேராபத்து – பலர் உயிரிழப்பு!

  • November 15, 2025
  • 0 Comments

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் குறைந்தது 09 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (14.11) ​​ஸ்ரீநகரின் நவ்காம் (Nowgam) பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 32 பேர் காயமடைந்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழு வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை மற்றும் தடயவியல் அதிகாரிகளாவர். படுகாயமடைந்தவர்களில் […]

பொழுதுபோக்கு

ஸ்ரேயாவின் கவர்ச்சி ஆட்டத்தில் வெளியானது “கனகா” பாடல்

  • November 15, 2025
  • 0 Comments

Non violence என்ற படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இதில் பிரபல நடிகை ஸ்ரேயா சரண் நடனம் ஆடியுள்ளார். ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் நான் வயலன்ஸ் (Non Violence) என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக மெட்ரோ படத்தின் மூலம் கவனம் பெற்ற சிரிஷ் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படத்தை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் […]

இலங்கை

அரசாங்கத்தின் பிடியில் காவல்துறை – நாமல் அதிருப்தி!

  • November 15, 2025
  • 0 Comments

அரசு ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள நாமல் ராஜபக்ச இந்த காலக்கட்டம் சவாலானது எனவும் தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். இலங்கை காவல்துறை “முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது” என்றும், தேசிய பாதுகாப்பு சரிந்துவிட்டது என்றும் அவர் கூறினார். அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட அதிக வரிச்சுமையால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 21 ஆம் […]

இலங்கை

ஜனாதிபதி – தமிழரசு கட்சி சந்திப்புக்கு நாள் நிர்ணயம் – iftamilலிடம் உறுதிப்படுத்தினார் சாணக்கியன்

  • November 15, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதியளவில் நடைபெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் www. iftamil.com யிடம் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் எனவும் அவர் கூறினார். இலங்கை தமிழரசுக் கட்சியால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பட்ட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றியே இதன்போது கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். […]

உலகம்

தாய்லாந்தில் அமுலில் இருந்த தடை நீக்கம் – மகிழ்ச்சியில் மக்கள்

  • November 15, 2025
  • 0 Comments

தாய்லாந்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானங்களை விற்கவும், அருந்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் இந்த தடை தளர்த்தப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. பகல் வேளையில் மக்கள் மது அருந்துவதைத் தடுக்கும் விதமாக, சமீபத்தில் இந்தக் கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு விதித்திருந்தது. இந்தத் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 8ஆம் திகதி இந்தத் தடை அமலுக்கு வந்த நிலையில், நாட்டின் […]

error: Content is protected !!