உலகம்

காஸா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு

  • November 16, 2025
  • 0 Comments

காஸாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இடம்பெறவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. சீரமைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அண்மையில் வொஷிங்டனில் (Washington) நடைபெற்றன. இந்தத் தீர்மானம், அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில், காஸாவுக்குத் தற்காலிகமாக […]

உலகம் செய்தி

அமெரிக்கக் கடல் எல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்ய இராணுவக் கப்பல்

  • November 16, 2025
  • 0 Comments

அமெரிக்காவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கரேலியா என்ற ரஷ்ய உளவுக் கப்பல் காணப்பட்டதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி முதன்முதலாக ஓஹு தீவிலிருந்து தெற்கே சுமார் 15 கடல் மைல் தொலைவிலுள்ள அமெரிக்கப் பிராந்திய நீர்நிலைகளுக்கு அண்மித்த பகுதியில் அது தென்பட்டது. உடனடியாக HC-130 ஹெர்குலஸ் விமானத்தையும், கட்டர் வில்லியம் ஹார்ட் (Cutter William Hart) கப்பலையும் ரஷ்யக் கப்பலுக்கு அண்மித்த […]

இலங்கை

உறுதியானது மாகாணசபைத் தேர்தல்: விசேட தெரிவுக்குழு அமைப்பு!

  • November 16, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் மற்றும் அது நடத்தப்படும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படவுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தின்போது துறைசார் அமைச்சரால் மேற்படி யோசனை முன்வைக்கப்படும். இதற்கமைய தெரிவுக்குழு அமைக்கப்பட்டு தேர்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை […]

உலகம்

விண்வெளிக்குச் சென்ற 4 எலிகள் பூமிக்குத் திரும்பின – உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்

  • November 16, 2025
  • 0 Comments

விண்வெளி ஆய்வுக்காக சென்ற சீன விண்வெளி வீரர்களுடன் அனுப்பப்பட்ட 4 எலிகள் நீண்ட கால தாமதத்தின் பின்னர் பூமிக்குத் திரும்பியுள்ளன. கடமைகளை முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்ப தயாரான விண்கலத்தில் சேதம் ஏற்பட்டமையினால், அந்தப் பயணம் தடைப்பட்டது. இதன் காரணமாக விஞ்ஞானிகளுடன் நான்கு எலிகளும் விண்வெளியில் தங்கியிருந்தன. இவ்வாறான நிலையில், பூமிக்குத் திரும்பிய உடனேயே, எலிகளின் நடத்தை மற்றும் உடலியல் ஆய்வுகளுக்காக ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. விண்வெளியில் இருந்த காலப்பகுதியில் எலிகள் குறைவான உணவை உட்கொண்டுள்ளன. எனினும் அதிகமாகத் […]

இலங்கை

ரணிலுக்கு தலையிடி: லண்டனிலும் களமிறங்கியது சிஐடி குழு!

  • November 16, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு லண்டன் Wolverhampton பல்கலைக்கழகத்தால் அனுப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது. இத பற்றி விசாரணை நடத்துவதற்கு ஐவரடங்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று பிரிட்டன் சென்றுள்ளது எனவும், ஐந்து நாள் பயணமாக இக்குழு இவ்வார தொடக்கத்தில் பிரித்தானியா சென்றுள்ளது எனவும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் பெறப்படாமல் அல்லது சட்டமா அதிபருக்கு தெரியப்படுத்தாமலேயே குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அதிகாரிகளின்இப்பணம் இடம்பெற்றுள்ளது எனவும் […]

இலங்கை

இந்தியா பறக்கிறது தமிழரசுக் கட்சியின் உயர் குழு!

  • November 16, 2025
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட குழுவினர் டில்லி செல்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது தமிழரசுக் கட்சிக்கு டில்லி அழைப்பு விடுக்கவுள்ளமை தொடர்பில் தூதுவர் சமிக்ஞைகளை வெளிப்படுத்தினார் என தெரியவருகின்றது. இலங்கையிலுள்ள பிரதான கட்சிகளின் பிரமுகர்களை புதுடெல்லி அழைத்து பேச்சு நடத்திவருகின்றது. எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் […]

ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

பூமியை நோக்கி வரும் பெரும் ஆபத்து – பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகுமா?

  • November 16, 2025
  • 0 Comments

தற்போது பூமியை நெருங்கி வரும் சக்திவாய்ந்த சூரியப் புயல், பல்கேரியாவின் பிரபல கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புடன் தொடர்புபட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார். அவரின் கணிப்பின்படி பல விடயங்கள் நடந்துள்ள நிலையில், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பூமியை நெருங்கும் இந்தச் சக்திவாய்ந்த புயலை, ஆட்கொல்லிப் புயல் (Cannibal Storm) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். சூரியனில் இருந்து […]

விளையாட்டு

ஷுப்மன் கில் மருத்துவமனையில் – அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

  • November 16, 2025
  • 0 Comments

இந்திய அணித் தலைவர் ஷுப்மன் கில், கழுத்துப் பிடிப்பு (Neck Spasm) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று அவர் பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறினார். சௌரவ் குமார் வீசிய பந்தில் பவுண்டரி அடித்த பிறகு, ஷுப்மன் கில்லுக்குத் திடீரெனக் கழுத்து வலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர், பரிசோதனைக்காக இரவு முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். “ஷுப்மன் கில்லுக்குக் […]

உலகம்

ஈராக்கில் பெரும் சோகம் – நாகரிகத்தின் தொட்டில் அழிவின் விளிம்பில்

  • November 16, 2025
  • 0 Comments

நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் ஈராக்கில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட பண்டைய நகரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடுமையான வறண்ட வானிலை, அப்பகுதி மண்ணின் உப்புத்தன்மையை அதிகரித்துள்ளது. இதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழல், பண்டைய கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட களிமண் செங்கற்களின் கட்டமைப்பை வேகமாகச் சிதைத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க […]

ஐரோப்பா

ஜெர்மனியில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி – அமுலாகும் கட்டுப்பாடுகள்

  • November 16, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள காட்டுப் பறவைகளில் H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நோய் பரவுவதைத் தடுக்க நகரம் புதிய பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல், பிராங்பேர்ட்டில் உள்ள அனைத்துக் கோழிகளையும் வீட்டிற்குள் அல்லது சிறப்பு பாதுகாப்பு உறைகளுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண்ணைப் பறவைகளைப் பாதுகாக்கவும், தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கவும் நகரம் விரும்புவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கோழிகள், வாத்துகள் மற்றும் பிற […]

error: Content is protected !!