உலகம்

மலேசியாவில் பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த இன்ஸ்டாகிராம் கும்பல் – பெருந்தொகை பணம் மோசடி

  • November 17, 2025
  • 0 Comments

மலேசியாவில் சூட்சுமமான மோசடியில் சிக்கிய பெண் ஒருவர் 291,000 ரிங்கிட்டை இழந்துள்ளார். ஜொகூர் பகுதியில் பகுதிநேரமாக வேலை செய்து மேலதிக வருமானத்தைப் பெற முயன்ற 56 வயதான பெண்ணே இவ்வாறு பணத்தை இழந்துள்ளார். குறித்த பெண் சமூக வலைத்தளங்களில் பகுதிநேர வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரம் ஒன்றைக் கண்டுள்ளார். இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் டெலிகிராம் (Telegram) மூலம் பணியாற்றுமாறு கும்பல் ஒன்றினால் பணிக்கப்பட்டுள்ளார். புகைப்படங்கள் தொடர்பான மதிப்பீடுகளை வழங்குவதே அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட பணியாகும். பணியை ஆரம்பிப்பதற்கு […]

உலகம்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை? தீவிர பாதுகாப்பில் நாடு

  • November 17, 2025
  • 0 Comments

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனாவிற்கு எதிரான வழக்கில் அந்நாட்டின் சிறப்பு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதற்கமைய, பங்களாதேஷில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கலவரம் செய்யும் நோக்குடன் செயல்படுபவர்களை கண்டதும் சுடுவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்தாண்டு ஜூலையில் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனால், உயிருக்கு பயந்து ஷேக்ஹசீனா […]

இலங்கை

திருகோணமலையில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் முயற்சி – பொலிஸாரை தாக்கிய பிக்கு

  • November 17, 2025
  • 0 Comments

திருகோணமலையில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் முயற்சி கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு முறியடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர கடற்கரைக்கு அருகில் விகாரை அமைக்கும் நோக்குடன், பிக்கு தலைமையிலான குழுவினால் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பிரச்சினை தீவிரமடைந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தபால விஜயபாலவுக்கு உடனடியாகத் தெரிவித்தார். இதனையடுத்துத் தலையிட்ட அரசாங்கம், பொலிஸ் […]

உலகம்

செயற்கை நுண்ணறிவுக் காதலன் – ஜப்பானில் AI கதாபாத்திரத்தை திருமணம் செய்த பெண்

  • November 17, 2025
  • 0 Comments

ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர், மனிதன் அல்லாத ஒரு செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரத்தைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 32 வயதான கனோ (Kano) என்ற பெண், தனது காதலன் குலோஸ் (Klaus) என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கதாபாத்திரத்தை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இந்தக் கதாபாத்திரம் ChatGPT மூலம் உருவாக்கப்பட்ட ஒரு மெய்நிகர் உருவம் ஆகும். திருமணத்தின்போது “நான் உங்களைக் காதலிக்கிறேன்” எனக் கனோ கூற, பதிலுக்கு குலோஸ் “நானும் உங்களைக் காதலிக்கிறேன்” எனப் […]

உலகம்

காசாவில் ஏற்படவுள்ள மற்றுமொரு பெரும் அவலம் – அவசர உதவி கோரும் அதிகாரிகள்

  • November 17, 2025
  • 0 Comments

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசாவை இயற்கையும் தீவிரமாகத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காசாவை நோக்கி நெருங்கி வரும் புயல் காரணமாகப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனவும், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகப் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள சுமார் பத்து இலட்சம் மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு முகங்கொடுக்கவுள்ளனர். ஏற்படவுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக கரையோரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கூடாரங்களைச் சேதப்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள […]

இலங்கை

யாழ் மாவட்டத்தில் அச்சுறுத்தும் ஆப்பிரிக்க நத்தைகள்

  • November 17, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பகுதியில் ஆப்பிரிக்க நத்தைகளின் பெருக்கம் விவசாயச் செய்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதற்கமைய, இந்த ஆப்பிரிக்க நத்தைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நெடுந்தீவு உள்ளிட்ட தீவுகளில் ஆப்பிரிக்க நத்தைகள் பெருகி, எவ்வாறு விவசாயத்தைப் பாதித்துள்ளதென நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார். அவர் யாழ் மாவட்ட விவசாயக் கூட்டத்தில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகம்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கச் சுரங்கம்

  • November 17, 2025
  • 0 Comments

சீனாவில் மிகப்பெரிய தங்கப் படிமங்கள் அடங்கிய சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1949ஆம் ஆண்டின் பின்னர் வடகிழக்கு லியோனிங் (Liaoning) மாகாணத்தில் இந்தச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சீனாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தச் சுரங்கத்தில் சுமார் 1500 டன்னுக்கும் (tonne) அதிகமான தங்கம் உள்ளதாக அமைச்சின் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 720 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 2.586 பில்லியன் டன் தாதுக்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாதுக்களில் ஒரு டன்னுக்குச் […]

உலகம் செய்தி

ஈரானில் உச்சக்கட்ட வறட்சி – செயற்கை மழை பொழிய வைக்க நடவடிக்கை

  • November 17, 2025
  • 0 Comments

ஈரானில் செயற்கை மழையை பொழிய வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். ஈரானில் நிலவும் பல ஆண்டுகால மிக மோசமான வறட்சியைச் சமாளிக்க, அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஈரானின் மிகப்பெரிய ஏரியான உர்மியா ஏரி (Urmia Lake) கிட்டத்தட்ட வறண்டுவிட்டது. இந்த நிலையில், அந்த ஏரி அமைந்த பகுதியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக IRNA செய்தித் தளம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கிழக்கு மற்றும் மேற்கு அசர்பைஜான் (Azerbaijan) வட்டாரங்களில் கூடுதல் செயற்கை […]

இலங்கை

இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணியிடம் பிறப்புறுப்பை காட்டி அநாகரிகமாக நடந்துகொண்ட நபர் கைது!

  • November 16, 2025
  • 0 Comments

இலங்கை வந்த நியூசிலாந்து சுற்றுலா பயணியிடம் பாலியல் சைகைகளை காண்பித்து அநாகரிகமாக நடந்துகொண்ட  இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான இளைஞர் அறுகம்குடாவை சுற்றிப்பார்க்க வந்த நியூசிலாந்து பெண் சுற்றுலா பயணியிடம் தனது பிறப்புறுப்பை காட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கிடையே குறித்த நியூசிலாந்து பெண் இது தொடர்பான […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

குளிர் பருவம் ஆரம்பம் – பிரித்தானியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

  • November 16, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் NHS தலைவர்கள் “ஃப்ளூ தடுப்பூசி SOS” பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். குளிர் பருவம் ஆரம்பித்துள்ள நிலையில், மிகக் கடுமையான காய்ச்சல் தொற்றுநோயை எதிர்த்து தடுப்பூசி போடுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். H3N2 காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் H3N2 வகை தொற்றின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹிலாரி ஜோன்ஸ் ( Hilary Jones) எச்சரித்துள்ளார். இது நோய் எதிர்ப்பு சக்தியை பயனற்றதாக்கிவிடும் எனக் குறிப்பிட்டுள்ள […]

error: Content is protected !!