கருத்து & பகுப்பாய்வு

சந்திரன் தொடர்பில் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு! பல மர்மங்களுக்கு விடை

  • November 18, 2025
  • 0 Comments

சந்திரனின் மேற்பரப்பில் ஒக்ஸிஜன் உள்ளமையை உறுதிப்படுத்தும் வகையிலான தாதுக்களைச் சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒக்ஸிஜனேற்றம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் இரும்பு ஒக்ஸைடு தாதுக்களைக் கண்டுபிடித்தமையானது, சந்திரன் குறித்த ஆய்வில் குறிப்பிடத்தக்க விடயம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் சாங்’இ-6 (Chang’e-6) விண்கலம் மூலம் சேகரிக்கப்பட்ட, 3,000 மில்லிகிராம் எடை கொண்ட சந்திர மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்தத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்திர மாதிரிகளை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Electron Microscope) மூலம் பகுப்பாய்வு செய்தபோது, அவற்றில் ஹெமடைட் (Hematite), […]

இலங்கை

இலங்கையில் 6,700 இணையவழிக் குற்றங்கள் பதிவு – அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்

  • November 18, 2025
  • 0 Comments

இலங்கையில் இணையவழிக் குற்றங்கள் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) அமைப்பு அறிவித்துள்ளது. இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 6,700 இற்கும் மேற்பட்ட இணையவழிக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சேர்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது நாட்டில் இணைய அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பதிவான சம்பவங்களில் சுமார் 600 சம்பவங்கள் நேரடியாக இணைய துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் நிதி மோசடிகள் போன்றவற்றுடன் தொடர்புடையவை ஆகும். இந்தக் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மூன்று ஆண்டுகளில் முற்றிலும் புதிய வடிவம்! ஐபோனை மறுசீரமைக்க அப்பிள் திட்டம்

  • November 18, 2025
  • 0 Comments

அப்பிள் (Apple) நிறுவனமானது தனது ஐ-போன் திறன்பேசியை (iPhone Smartphone) முற்றுமுழுதாக மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி இணையத்தளம் அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் முற்றிலும் புதிய வடிவமைப்புகளைக் கொண்ட ஐ-போன் திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்படும் என அந்த இணையத்தளத்தின் தொழில்நுட்பச் செய்தியாளர் மார்க் கெர்மன் (Mark Kerman) தெரிவித்துள்ளார். அப்பிள் நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் புதிய கருவிகளை அறிமுகம் செய்திருந்தது. எனினும், அப்பிளின் போட்டி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence […]

இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – இனவாதமாக சித்தரிக்கும் முயற்சி

  • November 18, 2025
  • 0 Comments

திருகோணமலையில் நிகழ்ந்த சம்பவத்தை இனவாத அல்லது மதவாத அசம்பாவிதமாகச் சித்தரித்துக் காட்டச் சில சக்திகள் முயல்வதாக பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். இது முற்றிலும் நீதிமன்ற விவகாரம் என்றும், இந்தச் சம்பவத்தில் அரசாங்கத்தின் தலையீடு கிடையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். நீதிமன்றத்தின் சுதந்திரத்தை வலுவாகப் பாதுகாக்கும் அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று முன்தினம் மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலை பெரும் பதற்றத்துக்கு மத்தியில், அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. குறித்த […]

உலகம் செய்தி

ஜப்பானில் எரிமலை வெடிப்பு! விமானச் சேவைகள் இரத்து – சாம்பல் குறித்து எச்சரிக்கை

  • November 18, 2025
  • 0 Comments

ஜப்பானின் கியூஷு (Kyushu) தீவில் அமைந்துள்ள சகுராஜிமா (Sakurajima) எரிமலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடந்த மூன்று வெடிப்புகளுக்குப் பிறகு, நேற்று நான்காவது முறையாகவும் எரிமலை  குமுறியுள்ளது. இந்த வெடிப்பின்போது நான்கு கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் எழுந்துள்ளது. அத்துடன், சுமார் இரண்டரை கிலோமீட்டர் வரை புகையும் சாம்பலும் பரவின. இதன் காரணமாக, அருகில் உள்ள விமான நிலையத்தில் 30 விமானச் சேவைகள் […]

உலகம் செய்தி

சவுதி அரேபியாவிற்கு F-35 விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஆலோசனை

  • November 17, 2025
  • 0 Comments

சவூதி அரேபியாவிற்கு(Saudi Arabia அமெரிக்காவில்(America) தயாரிக்கப்பட்ட F-35 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார். வாஷிங்டன்(Washington) மற்றும் ரியாத்(Riyadh) உறவுகளை ஆழப்படுத்தவும், டிரம்ப் ஆபிரகாம்(Abraham) ஒப்பந்தங்களில் சேரவும் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கவும் அழுத்தம் கொடுக்கவும் முயற்சிக்கும் நிலையில் இந்த விற்பனை ஒப்புதல் வந்துள்ளது. F-35 விமானங்கள் உலகின் மிகவும் மேம்பட்ட ஜெட் விமானங்களில் ஒன்றாகும், ஒரு விமானத்தின் விலை சுமார் US$100 மில்லியன் (S$130 மில்லியன்).

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கு 100 போர் விமானங்களை விற்க பிரான்ஸ் ஒப்புதல்

  • November 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் உக்ரைனுக்கு தனது இராணுவ ஆதரவை மட்டுப்படுத்தியுள்ளதால், ஐரோப்பிய ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, உக்ரைனுக்கு(Ukraine) 100 ரஃபேல் போர் விமானங்களை(Rafale fighter jets) விற்பனை செய்வதாக பிரான்ஸ்(France) உறுதியளித்துள்ளது. போர் விமானங்களுடன் கூடுதலாக பல்வேறு பிரெஞ்சு பாதுகாப்பு உபகரணங்களும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன்(Sweden) 150 போர் விமானங்களை உக்ரைனுக்கு விற்க ஒப்புக்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் “நமது இரு நாடுகளுக்கும் உண்மையிலேயே வரலாற்றுச் […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் அரசியல் வாக்குவாதத்தில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் கொலை

  • November 17, 2025
  • 0 Comments

பீகார்(Bihar) தேர்தல் தீர்ப்பு தொடர்பாக அரசியல் விவாதங்கள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) குணா(Guna) மாவட்டத்தில், 22 வயது இளைஞர் ஒருவர் தனது உறவினர்களால் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பீகாரின் ஷிவ்ஹார்(Shivhar) மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் சங்கர் மஞ்சி என்ற தொழிலாளி, தனது தாய் மாமாக்கள் 25 வயது ராஜேஷ் மஞ்சி மற்றும் 27 வயது தூபானி மஞ்சி ஆகியோருடன் தங்கியிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். […]

செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலிய பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நபர் 28 வயதில் மரணம்

  • November 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவிற்காக பாராலிம்பிக்(Paralympic) தங்கப் பதக்கம் வென்ற பைஜ்(Paige Greco) கிரேக்கோ 28 வயதில் காலமானார். டோக்கியோ(Tokyo) 2020 பாராலிம்பிக் போட்டிகளில் தனது நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற பாரா-சைக்கிள் ஓட்டுநர் அடிலெய்டில்(Adelaide) உள்ள தனது வீட்டில் உடல்நலம் குறைவால் காலமானார் என்று விளையாட்டின் தேசிய நிர்வாக அமைப்பான ஆஸ் சைக்ளிங் தெரிவித்துள்ளது. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட பைஜ் கிரேக்கோ, 2018ல் சைக்கிள் ஓட்டுதலுக்கு மாறுவதற்கு முன்பு ஒரு தடகள வீரராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். கிரேக்கோ […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்களில் ஐந்து பேர் உயிரிழப்பு

  • November 17, 2025
  • 0 Comments

உக்ரைன்(Ukraine) மீது ரஷ்யா(Russia) நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு உக்ரைனில் ஒரு மழலையர் பள்ளியை தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு கார்கிவ்(Kharkiv) பிராந்தியத்தில் உள்ள முன்னணி நகரமான பாலக்லியாவின்(Balakliya) குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “பல அடுக்குமாடி கட்டிடங்களையும் ஒரு மழலையர் பள்ளியையும் தாக்கி […]

error: Content is protected !!