இலங்கை

இலங்கையில் இதய சத்திர சிகிச்சைப் பிரிவுகள் மூடப்படலாம்!

  • June 23, 2023
  • 0 Comments

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக இதய சத்திர சிகிச்சைகள் மூடப்படாம் எனவும் மருத்து வல்லுநர்கள் எதிர்வுக்கூறியுள்ளனர். இது குறித்து மருத்துவ வல்லுநர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில்  கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் இடம்பெயர்வதைத் தெரிவு செய்ததாலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டதாலும் மற்றும் ஓய்வுபெறும் மருத்துவர்களின் வயதெல்லை போன்ற காரணிகளாலும்  பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுக்காண […]

இலங்கை ஐரோப்பா

அன்டோனியோ குட்டரஸை சந்தித்த ஜனாதிபதி ரணில்

  • June 23, 2023
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் உடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதேவேளை, ஏற்கனவே கடுமையான நிதி அழுத்தத்தில் உள்ள ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பெரும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்க-சீனா பதட்டங்களை நிவர்த்தி செய்வதை வல்லரசுகள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். […]

ஐரோப்பா

குழந்தையின் அழுகையை நிறுத்த செய்யும் செயல்; சுவிஸ் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

  • June 23, 2023
  • 0 Comments

குழந்தையின் அழுகையை நிறுத்துவற்காக அதை வேகமாக குலுக்குவது அல்லது ஆட்டுவது, குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என சுவிஸ் மருத்துவமனைகள் இரண்டு கூறியுள்ளன. குழந்தையை வேகமாக குலுக்குவது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் குழந்தை அழும்போது பல பெற்றோர் குழந்தையின் அழுகையை நிறுத்துவற்காக அதை வேகமாக குலுக்கவோ ஆட்டவோ செய்கிறார்கள். ஆனால், அப்படி செய்வது குழந்தையின் மூளை, கண்ணின் பின்னாலுள்ள விழித்திரை ஆகிய உறுப்புகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள் சுவிஸ் மருத்துவர்கள். அதனால், குழந்தைக்கு மன நல பாதிப்பு […]

தென் அமெரிக்கா விளையாட்டு

காதலியிடம் பகிங்கரமாக மன்னிப்புக் கேட்ட நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர்

  • June 23, 2023
  • 0 Comments

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீர்ரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியை ஏமாற்றியதற்கு சமூக வலைதறத்தில் பகிங்கரமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அண்மையில் மாடல் அழகி ஒருவருடன் நெய்மர் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசு செய்திகள் வெளியானது . இதனையடுத்து புருனா பியான்கார்டி-நெய்மர் இருவருக்கும் இடையே கருத்து வெறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலி புருனா பியான்கார்டியை தனது கனவுப் பெண் எனவும் வாழ்க்கையின் ஒரு பகுதியான அவள் தன்னுடன் வேண்டும் எனவும் இன்ஸ்டாகிராமில் நெய்மர் உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார். […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வாக்களிக்க தவறிய 14 ஆயிரம் பேர்!

  • June 23, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் 14 ஆயிரம் பேர் வாக்களிக்க தவறியதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது சரியான புகைப்பட அடையாள அட்டையை தயாரிக்கத் தவறியதால் மேற்படி நிலை ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி, வாக்காளர்கள் வாக்குச் சீட்டை அனுமதிக்கும் முன் புகைப்பட அடையாளத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட படிவத்தைக் காட்ட வேண்டும். வாக்குச் சாவடிக்குச் சென்ற 0.25% பேர் (தோராயமாக 14,000 பேர்) அவர்களுடைய அடையாளத்தை உறுதிபடுத்த முடியாத […]

ஐரோப்பா

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறியது தவறா? : மக்களின் நிலைப்பாடு என்ன?

  • June 23, 2023
  • 0 Comments

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்து வாக்களித்து இன்றுடன் (23.06) ஏழு ஆண்டுகளாகியுள்ளது. டோனி பிளேர் இன்ஸ்டிடியூட் மற்றும் டெல்டாபோல் இணைந்து நடத்திய ஆய்வில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வாக்களித்த 18 வீதமானோர் தற்போது தங்கள் தவறை உணர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் பங்கேற்ற 80 வீதமானோர் பிரித்தானியா, ஐரோப்பிய யூனியனுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் பேங்க் ஃஒப் இங்கிலாந்து தனது வட்டி விகிதத்தை ஐந்து வீதமாக […]

ஐரோப்பா

ரஷ்யாவை உலகளாவிய குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த ஐ.நா!

  • June 23, 2023
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபை ரஷ்யாவின் ஆயுதப் படைகளை உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு உக்ரைனில் 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 518 குழந்தைகள் அங்கவீனர்களாகியதாகவும், மருத்துவமனைகள் மீது 480 தாக்குதல்களை நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொண்ணூற்றொரு குழந்தைகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உக்ரைனும் போரில் 80 குழந்தைகளை கொன்றுள்ளது, 175 குழந்தைகள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். 212 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியது. இருப்பினும் உக்ரைன் குற்றவாளிகள் […]

பொழுதுபோக்கு

கமலுக்கு போட்டியாக அவருடைய படமே ரிலீஸ்!! இது என்ன புது கதையா இருக்கு!!!

  • June 23, 2023
  • 0 Comments

கமல்ஹாசன் நடித்துள்ள இந்திய 2 படத்துக்கு போட்டியாக அவர் நடித்துள்ள மற்றுமொரு பிரம்மாண்ட படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் விறுவிறுவென தயாராகி வரும் இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இருவர் பலி; 7பேர் மாயம்

  • June 23, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸில், மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்ததால் இருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்த்ளனர். மிண்டனாவோ தீவுக்கு கிழக்கே 337 கிலோமீற்றர் தூரத்தில் நேற்றிரவு இப்படகு கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜென்சிஸ் 2 என பெயரிடப்பட்ட இப்படகில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 23 ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்களில் 14 பேர் ஏனைய மீன்பிடிக் படகுகளால் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதுடன் இன்றுகாலை மற்றொரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ‘மேலும் மாயமான […]

இந்தியா

கிணற்றில் 3 பிள்ளைகளுடன் சடலமாக கிடந்த பெண்!

  • June 23, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோகன்லால். இவர் மும்பையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா தனது 3 பிள்ளைகளுடன் பிரதாப்கரில் வாழ்ந்து வந்துள்ளார்.இந்நிலையில், நகர்பூர் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் பெண்ணொருவர் மூன்று பிள்ளைகளுடன் பிணமாக மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த […]

error: Content is protected !!