காஸா மக்களை குடியமர்த்த தெற்கு சூடானுடன் ஆலோசனை நடத்தும் இஸ்ரேல்
காஸா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் போர்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமாற்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் அரசு அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான தகவலின்படி, தற்போது வரை எந்த உத்தியோகப்பூர்வ உடன்பாடும் எட்டப்படவில்லை. கடந்த மாதம் இஸ்ரேலுக்கு வந்த தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சர் மண்டே செமயா கும்பாவுடன் முதன்முறையாக இந்த விவகாரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. […]













