உலகம்

சீன மற்றும் அமெரிக்கா இடையே தீவிரமடையும் வர்த்தகப் பதற்றம்

  • September 14, 2025
  • 0 Comments

அமெரிக்கா மேலும் 23 சீன நிறுவனங்களுக்கு வர்த்தகத் தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து சீனா இரட்டை விசாரணையை தொடங்குகிறது. அமெரிக்கப் பகுதி மின்கடத்தி ஏற்றுமதிகளைச் சீனா விசாரிக்கிறது. அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் பேச்சைத் தொடங்கும் நேரத்தில் புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தேசியப் பாதுகாப்பு என்று சொல்லிக் கொண்டு ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதாகச் சீனா குறைகூறுகிறது. ஸ்பெயினின் மாட்ரீட் நகரில் வர்த்தகப் பேச்சு தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் TikTok செயலியைச் சீன நிறுவனம் வரும் புதன்கிழமைக்குள் விற்க […]

செய்தி

சாம்சங் நிறுவனத்திற்குப் போட்டியாக ஏ.ஐ. வசதியுடன் நுபியா ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

  • September 14, 2025
  • 0 Comments

ஸ்மார்ட்போன் சந்தையில், சாம்சங் நிறுவனத்திற்குப் போட்டியாக, ZTE நிறுவனம் ஒரு அதிரடி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் மிக மெல்லிய போன்களில் ஒன்றான ‘நுபியா ஏர்’ (Nubia Air), அட்டகாசமான அம்சங்களுடன் பெர்லின் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நுபியா ஏர் ஸ்மார்ட்போன் வெறும் 5.9 மி.மீ. மெல்லிய வடிவமைப்புடன் வெளியாகி, பயனர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. வெறும் 172 கிராம் எடை மட்டுமே கொண்டது. இதன் விலை சுமார் ரூ.24,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவில் இந்த மாதமும், பிற […]

ஆஸ்திரேலியா முக்கிய செய்திகள்

எதிர்வரும் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் அபாயம் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

  • September 14, 2025
  • 0 Comments

எதிர்வரும் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியா நீண்டகால கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஒரு கண்டமாக, ஆஸ்திரேலியா இயற்கையாகவே 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் கடுமையான வறட்சிக்குள்ளாகிறது என காலநிலை விஞ்ஞானி ஜார்ஜினா பால்ஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்கால வானிலை நிகழ்வுகளை முன்னறிவிக்கவும், தயார் செய்யவும் உதவுவதற்காக ஆஸ்திரேலியாவின் கடந்த காலத்தை அவர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளார். நவீன வானிலை அவதானிப்புகள், காலநிலை மாதிரி உருவகப்படுத்துதல்கள் மற்றும் மர வளையங்கள் மற்றும் பனிக்கட்டிகள் போன்ற […]

விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்! இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

  • September 14, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கான பதிலடி, அதைத் தொடா்ந்து இரு நாடுகளிடையே எழுந்த போா்ப் பதற்றம் என பரபரப்பான அரசியல் சூழல் சற்று தணிந்த பிறகு, இவ்விரு அணிகள் சந்திக்கும் முதல் ஆட்டம் இதுவாகும். இந்திய அணியைப் பொருத்தவரை, ஷுப்மன் கில், சூா்யகுமாா் யாதவ், அபிஷேக் சா்மா உள்ளிட்டோா் பேட்டிங்கிலும், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் […]

இலங்கை

இலங்கையின் இன்றைய காலநிலை தொடர்பில் வெளியான தகவல்

  • September 14, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் இறுதிச்சடங்கின் போது உயிர்பெற்ற இளைஞன் – அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்

  • September 14, 2025
  • 0 Comments

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞன் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவருக்கு இறுதிச்சடங்கைச் செய்யக் குடும்பத்தினர் தொடங்கினர். 19 வயது பாவ் லச்கே என்ற இளைஞன் திடீரென்று இருமத் தொடங்கியதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று விளக்கம் கேட்டனர். முதலில் மருத்துவர்கள் லச்கேவுக்குப் பிழைக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகக் கூறியிருந்தனர். அதை நம்பி குடும்பத்தினர் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிலைமை இன்னும் […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவு நீக்கம் – இயல்பு நிலைக்குத் திரும்பிய நேபாளம்

  • September 14, 2025
  • 0 Comments

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஐந்து நாட்களாக நீடித்த பாரிய போராட்டங்களுக்குப் பிறகு, நேபாள அரசாங்கம் நேற்று நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது. அதற்கமைய, தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அன்றாட வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக பதவியேற்றார், […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

பாலஸ்தீன நாடு இனி இருக்காது – இஸ்ரேல் பிரதமரின் பேச்சால் பரபரப்பு

  • September 14, 2025
  • 0 Comments

பாலஸ்தீன நாடு இனி இருக்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீன எங்களுக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பாலஸ்தீன நாடு […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க மாநிலம் ஒன்றில் அதிரடியாக 1000 இராணுவத்தினரை களமிறக்கும் டிரம்ப்

  • September 14, 2025
  • 0 Comments

அமெரிக்க மாநிலம் ஒன்றில் அதிரடியாkக 1000 இராணுவத்தினரை களமிறக்கும் டிரம்ப அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் நகர்ப்புற இடங்களில் இராணுவத் துருப்பினர் 1,000 பேரைப் பணியில் அமர்த்த டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைக்கவுள்ளது. சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அலுவலகத்தின் ஆவணங்களை மேற்கோள்காட்டி இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்தபோதும் குற்றச் செயல்களை முக்கிய விவகாரமாகக் கையாள ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் முயற்சி செய்துள்ளார். இந்த திட்டத்திற்கமைய, நியூ ஓர்லீன்ஸ் […]

ஐரோப்பா செய்தி

அடுத்த ஆண்டு ரஷ்யாவை எதிர்த்து போராட $120 பில்லியன் தேவை – உக்ரைன்

  • September 13, 2025
  • 0 Comments

அடுத்த ஆண்டும் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டால் 120 பில்லியன் டாலர்கள் தேவை என்றும், போர் முடிந்தாலும் கூட, அதன் இராணுவத்தைப் பராமரிக்க இதே அளவு தேவைப்படும் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் தற்போதய மொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை பாதுகாப்புக்காக செலவிடுகிறது மற்றும் பொருளாதாரத்தை தக்க வைக்க மேற்கத்திய நட்பு நாடுகளின் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர் நிதி உதவியை நம்பியுள்ளது. கியேவில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய உக்ரைனின் […]

error: Content is protected !!