இந்தியா – காலைத் தொட்டு வணங்காத மாணவர்களை கடுமையாக தண்டித்த ஆசிரியை
காலையில் பள்ளி ஒன்றுகூடலுக்குப் பிறகு தன் காலைத் தொட்டு வணங்காத 31 மாணவர்களை அடித்ததற்காக ஆசிரியை ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) நிகழ்ந்தது. பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அப்பெண், பெத்னோட்டியிலுள்ள காந்ததேவுலா அரசு நடுநிலைப் பள்ளியில் துணை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அன்றைய நாள் காலை இறைவணக்கத்திற்குப் பிறகு, 6, 7, 8ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் […]













