இந்தியா

இந்தியா – காலைத் தொட்டு வணங்காத மாணவர்களை கடுமையாக தண்டித்த ஆசிரியை

  • September 16, 2025
  • 0 Comments

காலையில் பள்ளி ஒன்றுகூடலுக்குப் பிறகு தன் காலைத் தொட்டு வணங்காத 31 மாணவர்களை அடித்ததற்காக ஆசிரியை ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) நிகழ்ந்தது. பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அப்பெண், பெத்னோட்டியிலுள்ள காந்ததேவுலா அரசு நடுநிலைப் பள்ளியில் துணை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அன்றைய நாள் காலை இறைவணக்கத்திற்குப் பிறகு, 6, 7, 8ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் […]

ஆசியா

சீனாவில் உள்ள இரண்டு பிரபல கேட்டரிங் நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கில் அபராதம் விதிப்பு!

  • September 16, 2025
  • 0 Comments

சீனாவில் உள்ள இரண்டு பிரபல கேட்டரிங் நிறுவனங்களுக்கு 2.2 மில்லியன் யுவான் ($309,000; £227,000) செலுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹாட்பாட் உணவகத்தில் குழம்புப் பானையில் இரண்டு இளைஞர்கள் சிறுநீர் கழித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹைடிலாவோவின் ஷாங்காய் கிளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாரும் மாசுபட்ட குழம்பை உட்கொண்டதாக எந்தக் குறிப்பும் இல்லை, ஆனால் சம்பவத்திற்குப் பிறகு குறித்த நாளில்   உணவகத்தில் உணவருந்தியவர்களுக்கு ஹைடிலாவ் பணம் கொடுக்க முன்வந்ததாக […]

இலங்கை

ஈராக்குடனான மாஸ்கோவின் தொடர்புகள் பரந்த ஒத்துழைப்புடன் தீவிரமடைகின்றன ; ரஷ்ய அதிகாரி

  • September 16, 2025
  • 0 Comments

செவ்வாயன்று, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு, ஈராக்குடனான மாஸ்கோவின் தொடர்புகள் மேலும் தீவிரமாகி வருவதாகவும், பாக்தாத் வருகையின் போது வணிகம், பொருளாதாரம், போக்குவரத்து, இராணுவம் மற்றும் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் கூறினார். தொடர்புகள் மேலும் தீவிரமாகி வருகின்றன, மேலும் அவை பலதரப்பட்டவை. இது வணிகம், பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பானது. இராணுவ மற்றும் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்று, ஈராக் பிரதமரின் தேசிய பாதுகாப்புக்கான துணை ஆலோசகர் அலி நாசருடன் பாக்தாத் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • September 16, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு இன்று (16.09) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மே 31, 2024 அன்று நடந்த கத்திகுத்து தாக்குதலில் 29 வயதுடைய ரூவன் லார் என்ற பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார். ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி சுலைமான் என அடையாளம் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தாக்குதல் நடந்தபோது 25 வயதாக இருந்த ஆப்கானிஸ்தான் குடிமகன் […]

பொழுதுபோக்கு

மூன்று தலைமுறைகளுடனும் நடித்த ரம்யா கிருஷ்ணன்

  • September 16, 2025
  • 0 Comments

அக்கினேனி நாகேஸ்வரராவ் முதல் அக்கினேனி அகில் வரை, தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த ஒரு கதாநாயகி தான் ரம்யா கிருஷ்ணன் இவர் தமிழில் 1983ல் வெளிவந்த வெள்ளை மனசு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றவருக்கு படையப்பா படம் தனி அடையாளத்தை உருவாக்கியது. அக்கினேனி நாகேஸ்வர ராவுடன் இட்டாரு இட்டாரே, சூத்திரதாருலு போன்ற படங்களில் பணியாற்றினார். நாகார்ஜுனாவுடன் சங்கீர்தனா, […]

வட அமெரிக்கா

TikTok தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தத்தை எட்டியுள்ள அமெரிக்கா, சீனா; வெள்ளிக்கிழமை பேச உள்ள டிரம்ப் மற்றும் ஜி

  • September 16, 2025
  • 0 Comments

அமெரிக்காவும் சீனாவும் இழுபறியாக இருந்த டிக்டாக் செயலி விவகாரம் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள உரிமையாளரிடம் டிக்டாக் செயலியை ஒப்படைக்க கட்டமைப்பு அளவிலான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் சீனாவும் செய்துகொள்ளவிருக்கின்றன. அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இம்மாதம் 19ஆம் திகதி தொலைபேசியில் உரையாடும்போது ஒப்பந்தம் உறுதிபடுத்தப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பிரபல டிக்டாக் செயலியை இம்மாதம் 17ஆம் திகதிக்குள் சீனா, அமெரிக்க நிறுவனத்திடம் கைமாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவில் அது […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

UKவில் இருந்து பிரான்ஸுக்கு நாடுகடத்தப்பட இருந்த குடியேறி – மறுப்பு தெரிவித்த நிறுவனம்!

  • September 16, 2025
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் திட்டம் கடைசி நிமிடத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் கால்வாயைக் கடந்து வந்த ஒரு புலம்பெயர்ந்தவர் நேற்று (15.09) பிற்பகல் பாரிஸுக்கு திட்டமிடப்பட்ட விமானத்தில் திருப்பி அனுப்பப்படவிருந்தார். ஆனால் ஜூலை மாதம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்துடன் உடன்பட்ட புதிய ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ ஒப்பந்தத்தின் கீழ் வெளியேற்றம் கைவிடப்பட்டது. ஏர் பிரான்ஸ் சேவையில் வெளியேற்றம் நடைபெறவிருந்ததற்கு சற்று முன்பு புலம்பெயர்ந்தவரின் வழக்கறிஞர்கள் தாமதமாக […]

மத்திய கிழக்கு

தோஹாவில் தாக்குதலுக்குப் பின்பு இஸ்ரேல் உறவுகளை மறுபரிசீலனை செய்ய அரபு,முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்தல்

  • September 16, 2025
  • 0 Comments

கத்தார் தலைநகரில் ஹமாஸ் தலைவர்கள்மீது கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தோஹாவில் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற அவசர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இஸ்ரேலுடனான உறவை மறுபரிசீலனை செய்ய அரபுநாட்டு, முஸ்லிம் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். காஸா போர்நிறுத்த முன்மொழிவு குறித்து கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் கலந்தாலோசித்தபோது அவர்கள்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஏறக்குறைய 60 நாடுகளை ஒன்றிணைத்த அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டு அமர்வு உறுதியான நடவடிக்கை எடுக்க முற்பட்டது. […]

செய்தி மத்திய கிழக்கு

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இடம்பெறும் இனப்படுகொலை – ஐ.நா சுட்டிக்காட்டு!

  • September 16, 2025
  • 0 Comments

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து இந்த இனப்படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐ.நா சபை வெளியிட்டள்ள அறிக்கையில், ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்க வேண்டுமென்றே நிபந்தனைகளை விதிப்பது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது என்பனவற்றின் ஊடாக வௌிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றாக இஸ்ரேலிய தலைவர்களின் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கங்கள் – அச்சத்தில் மக்கள்!

  • September 16, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு சற்று முன்பு ஒரானா பகுதியில் 3.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இவ் நிலநடுக்கமானது  10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும்,  விக்டோரியா வரை   உணரப்ட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒருசில மணிநேரங்களில் இன்று (13.09) அதிகாலை மேல் ஹண்டரில் உள்ள மஸ்வெல்புரூக் அருகே 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவானது. ஆழமான ஓரானா […]

error: Content is protected !!