செய்தி விளையாட்டு

Asia Cup – இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் அதிரடி வெற்றி

  • September 20, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா 22 ஓட்டங்களுக்கும் , குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தசுன் ஷனகா […]

ஐரோப்பா செய்தி

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைந்த ஆப்கானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தம்பதியினர்

  • September 20, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எட்டு மாத தடுப்புக்காவலுக்குப் பிறகு தலிபான் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட வயதான பிரிட்டிஷ் தம்பதியினர் பிரித்தானியா வந்தடைந்துள்ளனர். 80 வயதான பீட்டர் ரெனால்ட்ஸ் மற்றும் அவரது 77 வயது மனைவி பார்பி வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்காக தங்கியிருந்த கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து விமானத்தில் வந்தனர். அவர்களின் உடல்நலம் குறித்த அச்சங்கள் அதிகரித்த பின்னர் தம்பதியினரை தலிபான் விடுவித்தது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கிய தம்பதியினருடன் அவர்களின் மகள் சாரா என்ட்விஸ்டில் மற்றும் […]

ஐரோப்பா செய்தி

நெதர்லாந்தில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிசார் மோதல்

  • September 20, 2025
  • 0 Comments

நெதர்லாந்தின் ஹேக்கில் நடந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க டச்சு காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர் பீரங்கியையையும் பயன்படுத்தியதாக உள்ளூர் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தேசியத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் புகலிடம் கோருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலதுசாரி ஆர்வலர் ஒருவர் ஏற்பாடு செய்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஏராளமான போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் வன்முறையில் மோதினர், கற்கள் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் ரசாயன கடத்தலில் ஈடுபட்ட சீன நிறுவன அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை

  • September 20, 2025
  • 0 Comments

போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை கடத்தியதற்காக சீன நிறுவன அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. வுஹானை தளமாகக் கொண்ட அமர்வெல் பயோடெக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி கிங்ஜோ வாங் மற்றும் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் யியி சென் ஆகியோர் பிப்ரவரியில் நியூயார்க்கில் ரசாயன இறக்குமதி மற்றும் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். மாவட்ட நீதிபதி பால் கார்டெஃப், வாங்கிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சென்னுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார். ஜூன் 2023ல், […]

ஆசியா செய்தி

சிறையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி சித்திரவதை செய்வதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு

  • September 20, 2025
  • 0 Comments

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், சிறையில் தன்னையும் தனது மனைவியையும் மன ரீதியாக சித்திரவதை செய்வதாக குற்றம் சுமத்தியுள்ளார். 72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான், பல வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அல்-காதிர் டிரஸ்ட் வழக்குகளில் இருவரும் தண்டிக்கப்பட்ட பிறகு, அவரது மனைவி புஷ்ரா பிபியும் அவருடன் சிறையில் […]

இந்தியா செய்தி

டெல்லியில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • September 20, 2025
  • 0 Comments

டெல்லியில் கடந்த சில நாட்களாக பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, பொலிஸார் சோதனை நடத்திய போது மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்றும் பல பாடசாலைகளுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிபிஎஸ் துவாரகா, கிருஷ்ணா மாடல் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டலால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்புடன் வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர். தகவலறிந்த […]

ஐரோப்பா செய்தி

அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஜெலென்ஸ்கி

  • September 20, 2025
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது அமெரிக்கப் பிரதிநிதி டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா தனது நாடு முழுவதும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பை நடத்துவதாகவும், டிரம்புடனான பேச்சுவார்த்தையின் போது உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் ரஷ்யா மீதான தடைகள் குறித்து விவாதிப்பதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், “தலைவர்களிடையே சந்திப்பு இல்லாவிட்டால் […]

பொழுதுபோக்கு

நடிகர் மோகன்லாலுக்கு உயர் விருதை அறிவித்தது மத்திய அரசு

  • September 20, 2025
  • 0 Comments

நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருபவர். மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. 2023ம் ஆண்டுக்கான இந்த விருது தேசிய விருது வழங்கும் விழாவில் சேர்த்து வழங்கப்படும் எனவும் அரசு கூறி இருக்கிறது. மோகன்லாலுக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 2019ம் ஆண்டுக்கான விருது […]

செய்தி விளையாட்டு

Asia Cup – 168 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி

  • September 20, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா 22 ஓட்டங்களுக்கும் , குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் காதலிப்பவர்களுக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை!

  • September 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒன்லைன் மோசடிகளால் ஆண்டுக்கு 106 மில்லியன் பவுண்ட்ஸிற்கும் அதிமான தொகை இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்லைன் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காதல் மோசடிகள் மோசமடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனிமையில் இருப்பவர்களை முதலில் காதல் வலையில் வீழ்த்தும் மர்ம நபர்கள் பின்னர் அவர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு மெல்ல மெல்ல அவர்களை ஏமாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Crimestoppers வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில் காதல் மோசடிகளால் […]

error: Content is protected !!