இலங்கையில் வாகன சாரதிகளுக்கு கட்டாயமாகும் நடைமுறை!
இலங்கை பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து ஓட்டுநர்களும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் “PT உரிமம்” (பொது போக்குவரத்து உரிமம்) பெறுவது கட்டாயம் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தின் போது போக்குவரத்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உரிமத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அது அமல்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் இருக்கை […]













