விளையாட்டு

ஆசிய கோப்பை – மீண்டும் கைகுலுக்காமல் சென்ற இந்திய – பாகிஸ்தான் வீரர்கள்!

  • September 22, 2025
  • 0 Comments

ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில், இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 17வது ஆசியக் கோப்பை தொடரானது துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் முதலிய 8 அணிகள் இரண்டு குழுக்களாக லீக் போட்டிகளில் விளையாடிய நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் முதலிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன. இந்த […]

ஐரோப்பா

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரித்தானியா – பிரான்ஸின் முடிவு விரைவில்

  • September 22, 2025
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியா, கனடா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. மேலும் எதிர்காலத்தில் பிரான்சும் இதை அறிவிக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு அமைதி மற்றும் இரு நாடுகள் தீர்வுக்கான நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார். எனினும், இது பிரித்தானிய ஆஸ்திரேலியா, கனடா மற்றும் போர்ச்சுகல் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு சமூக ஊடகம் தடை – வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

  • September 22, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்யும் சட்டம் டிசம்பரில் அமலுக்கு வருகின்றது. டிசம்பர் 10ஆம் திகதிமுதல் சிறுவர்களுக்கான டிக்டாக், பேஸ்புக், ஸ்னாப்சாட், ரெடிட், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, 16 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு சமூக ஊடகத் தடையை முன்மொழிந்த உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா ஆனது. இருப்பினும், இந்தத் தடையில் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட பிற […]

ஆசியா

கோவிட்-19 குறித்து செய்தி வெளியிட்ட சீன பத்திரிகையாளருக்கு மீண்டும் சிறைத்தண்டனை

  • September 22, 2025
  • 0 Comments

சீனாவின் வுஹானில் கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்கள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த சீன பத்திரிகையாளர் ஜாங் ஜானுக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 42 வயதான ஜாங் ஜானுக்கு 2020 டிசம்பரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அதே குற்றச்சாட்டுகளுக்காக மீண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அறிக்கை கூறுகிறது. கோவிட் தொற்றுநோயின் ஆரம்பகால பரவல் குறித்து வுஹானில் இருந்து நேரடி அறிக்கைகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதற்காக அவர் முதன்முதலில் 2020ஆம் ஆண்டு கைது […]

பொழுதுபோக்கு

ராதிகா வீட்டில் துக்க சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்

  • September 22, 2025
  • 0 Comments

மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா மனைவியும், நடிகைகள் ராதிகா, நிரோஷா ஆகியோரின் தாயாருமான கீதா ராதா (86), நேற்றிரவு 9.20 மணியளவில், உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக, சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடக்கும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 10 எலிகள் பலி! பல எலிகளின் எலும்பு வலிமையில் பாதிப்பு

  • September 22, 2025
  • 0 Comments

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் செயற்கைக்கோள் மூலம் இந்த எலிகள் அனுப்பப்பட்டுள்ளது. விண்வெளி பயணத்தின்போது வீரர்களுக்கு ஏற்படும் உயிரியல் தாக்கங்கள் குறித்த துல்லியமான தகவல்களைப் பெற, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 30 நாட்கள் சுற்றுப்பாதையில் இருந்த எலிகளில், 65 எலிகள் வெற்றிகரமாக பூமி திரும்பின. விண்வெளிப் பயணத்திற்கு பின் எலிகள் நிலை சமநிலைக்கு (vestibular) தொடர்பான சோதனைகளில் குறைவான செயல்பாடு காட்டியுள்ளன. ஊசி பிடிக்கும் தன்மை […]

ஆசியா செய்தி

இந்தியா – பாகிஸ்தான் உறவிற்கு சாத்தியமில்லை – பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு

  • September 22, 2025
  • 0 Comments

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இயல்பான உறவு சாத்தியமில்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்காமல் இயல்பான உறவு சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் பாகிஸ்தான் வம்சாவளியினரிடையே பேசிய அவர், இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்வது இந்தியாவின் பொறுப்பு என குறிப்பிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருப்பதற்குப் பதிலாக பகை நாடுகள் போல் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமைதியாக இருப்பது அல்லது தொடர்ந்து போராடுவது என்பது […]

ஆசியா செய்தி

அமெரிக்கா, வெனிசூலா இடையே அதிகரிக்கும் பதற்றம் – போருக்குத் தயார் படுத்தும் வெனிசூலா இராணுவம்

  • September 22, 2025
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், வெனிசூலாவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவிவருவதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வெனிசூலா இராணுவம் தங்கள் நாட்டு மக்களை போருக்குத் தயார் படுத்தும் விதமாக ஆயுதப் பயிற்சி அளித்தது. ரைபிள்கள் மட்டுமின்றி விமானத்தை சுட்டு வீழ்த்தக்கூடிய டர்ரெட் ரக துப்பாக்கியையும் இயக்க தன்னார்வளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வெனிசூலாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி, வெனிசூலா நாட்டு படகுகள் மீது அண்மையில் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாலேயே படகுகள் தாக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். […]

ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த போர்ச்சுகல்

  • September 21, 2025
  • 0 Comments

போர்ச்சுகல், பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பாலோ ரேஞ்சல் நியூயார்க்கில் அறிவித்துள்ளார். “நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான ஒரே பாதையாக போர்ச்சுகல் இரு நாடு தீர்வை ஆதரிக்கிறது, போர்நிறுத்தம் அவசரமானது” என்று வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஹமாஸ் கைப்பிடியில் உள்ள அணைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க பாலோ ரேஞ்சல் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பாலஸ்தீன அரசை அங்கீகரித்த பிரித்தானியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் போர்ச்சுகல் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் மூன்று திருநங்கைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு

  • September 21, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில், சாலையோரத்தில் மூன்று திருநங்கைகளின் உடல்களைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கராச்சியின் மேமன் கோத் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். “குண்டு துளைத்த மூன்று திருநங்கைகளின் உடல்கள் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டன,” என்று நகர காவல்துறை அதிகாரி ஜாவேத் அகமது அப்ரோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். பாகிஸ்தானில் ஹிஜ்ராக்கள் என்றும் அழைக்கப்படும் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறை […]

error: Content is protected !!