ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிபொருள் பற்றாக்குறை? அவசர எச்சரிக்கை

மத்திய கிழக்கில் இடம்பெறும் போர் காரணமாக பிரித்தானியாவில் எரிபொருள் பற்றாக்குறைகள் ஏற்படக்கூடும் என எரிசக்தி பொருளாதார நிபுணர் நிக் பட்லர் (Nick Butler) எச்சரித்துள்ளார்.

முக்கிய தொழில்கள் தொடர்ந்தும் எரிபொருளைப் பெறுவதை உறுதிசெய்ய அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் முக்கிய பொருளாதார சேவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எரிசக்தி பொருளாதார நிபுணர் நிக் பட்லர்
மேலும் கூறியுள்ளார்.

ஒரே இரவில் முழுப் பிரச்சினையையும் தீர்த்துவிடாது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதேவேளை, இன்று காலை கல்வித்துறைச் செயலாளர், எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்றும்,
மக்கள் தங்கள் வாழ்க்கையை வழமைப்போன்று தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி