செய்தி

குடும்பத்தினருக்கு கடும் மன உளைச்சலை கொடுத்த ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த், இவர் பற்றிய பரபரப்பு பேச்சு தான் தமிழ் சினிமாவில் இப்போது உள்ளது.

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நிறைய அரசியல் பிரமுகர்கள் சிக்க இப்போது நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியுள்ளார். அவரை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதியானது.

இதனால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார், அவருடன் வேறு யாரு எல்லாம் தொடர்பில் இருந்தார்கள், போதைப் பொருள் வேறு யாருடனாவது உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீகாந்த் தனது மகனை பார்த்துக்கொள்ள வேண்டும், குடும்பத்தில் பிரச்சனை என கூறி ஜாமின் கேட்டிருந்தார். தனது மகன் மீது அதிக பாசம் வைத்துள்ளாராம் ஸ்ரீகாந்த்.

அவரின் மகன் ஆஹில் ஸ்ரீகாந்திற்கு தந்தை போல் சினிமா துறைக்கு வர ஆசை இல்லை, விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராம்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை அள்ளியிருக்கிறார். ஸ்ரீகாந்தும் தனது மகனுக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் தனது மகன் பங்கேற்றால் முதல் ஆளாக சென்றுவிடுவாராம்.

மகனும் தன்னுடைய தந்தைதான் தனக்கு நெருங்கிய நண்பர் என்ற மனநிலையில் இருந்தாராம்.

மகனுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்த ஸ்ரீகாந்த் இப்போது இப்படியொரு பிரச்சனையில் சிக்கியிருப்பது அவரது குடும்பத்தினருக்கு கடும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி