இலங்கை செய்தி

பொலிஸில் பொய் முறைப்பாடு!! ஹோட்டலில் இருந்து தப்பியோடிய பிரித்தானியர்

பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை தொடர்பில் அலவத்துகொட பிரதேசத்தில் இருந்து செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

பிரித்தானிய பிரஜை அலவத்துகொடையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.

இவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

90,000 ரூபா பணம், 2 கைக்கடிகாரங்கள், கெமரா ஆகியவை திருடப்பட்டுள்ளதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த போது, சந்தேகத்திற்குரிய பிரித்தானிய பிரஜை விசாரணைகள் தேவையற்றது எனவும், காப்புறுதி இழப்பீடு பெறுவதற்கு ஆவணம் ஒன்றே போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரஜையின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் போது, அறையின் கதவுகள் உள்ளே இருந்து உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, தற்போது சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர் பொலிஸாரைத் தவிர்த்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content