இலங்கை

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

இலங்கையர்களுக்கு மேலதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ருமேனிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ருமேனிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது ருமேனிய தலைநகர் புக்கரெஸ்டில் இலங்கை தூதரகத்தை திறக்க தீர்மானித்தமைக்காக ருமேனிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் Traian Hristea இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் பெருமளவிலான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியமைக்காக ருமேனிய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், 2016 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையர்களுக்கு மிகவும் பிரபலமான வேலைத் தளமாக ருமேனியா இருந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்ததார்.

ஆடை, கட்டுமானம், ஹோட்டல், விவசாயம் ஆகிய துறைகளில் 32,000இக்கும் மேற்பட்ட இலங்கை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ருமேனியா தற்போது பாரிய உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தி வருவதால், இலங்கையர்களுக்கு மேலதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ருமேனிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் கல்வி, விவசாயம், ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவு நாட்டுக்கு தேவை எனவும் வலியுறுத்தியிருந்தார்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content