ஐரோப்பா

ரஷ்யாவின் ஹேக்கர்களுக்கு தடைவிதித்த பிரித்தானியா!

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இரண்டு ரஷ்ய ஹேக்கர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

குறித்த இருவரும் எம்.பி.க்கள், பிரபுக்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிறரை குறிவைத்து, சைபர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பிரிட்டன் ரஷ்ய தூதரை வரவழைத்துள்ளது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும்  லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் சைபர் தாக்குதல்கள் குறித்த பிரிட்டிஷ் தூண்டுதல்களை நம்புவதற்கு எந்த காரணங்களும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் பிறரின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்காக “ஸ்பியர்-ஃபிஷிங்” என்று அழைக்கப்படும் ஒரு நுட்பத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்