இலங்கை செய்தி

பொல்கொட ஏரியில் கண்டெடுக்கப்பட்ட 24 வயதுடைய ஆசிரியரின் சடலம்

கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியர் என அடையாளம் காணப்பட்ட 24 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் பொல்கொட ஏரியில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (நவம்பர் 13) காலை முதல் காணாமல் போயிருந்த உயிரிழந்தவர், பாணந்துறை பகுதியின் மடகிஸ்ஸ வீதியில் பொல்கொட ஏரிக்கரையில் காணப்பட்டுள்ளார்.

பிரமிட் திட்டத்தினால் அவர் பெரும் தொகையை இழந்துள்ளதாகவும், அதன் செயற்பாடுகள் அண்மையில் இலங்கையில் இடைநிறுத்தப்பட்டதாகவும், இறந்தவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது எடுத்துச் சென்ற சூட்கேஸ் வேறொரு இடத்தில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 24 வயதுடைய இளைஞனின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை