பெல்ஃபாஸ்டில் நீடித்த வன்முறையை தொடர்ந்து ஒன்றுக்கூடிய மக்கள்!
அண்மையில் பெல்ஃபாஸ்டில் (Belfast) இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இன்று இனவெறி எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றுள்ளது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
‘இனவெறிக்கு எதிராக ஒன்றிணைவோம்’ (Unite Against Racism) என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி பெல்ஃபாஸ்ட் நகர மன்றத்திற்கு வெளியே நடைபெற்றது.
பேரணியில் கலந்துகொண்ட பலரும், “இனவெறியர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்”, மற்றும் “பிரச்சனை தீமையும் வன்முறையுமே தவிர, இனம் அல்ல” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.




