இலங்கை

ஆசிரியரை ஆயுதத்தால் தாக்கிய மற்றுமொரு ஆசிரியர் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பதுளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஆசிரியர் ஒருவரை ஆயுதத்தால் தாக்கி மற்றுமொரு ஆசிரியர் காயப்படுத்திய சம்பவம் ஒன்றுபதிவாகியுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான ஆசிரியர் நேற்று பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன்போது அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் 46 வயதுடைய ஆசிரியை ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காயமடைந்தவர் 44 வயதுடைய ஆசிரியை ஒருவரெனவும், அவர் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர்கள் இருவரும் வெவ்வேறு பாடசாலைகளில் கடமையாற்றிவருபவர்கள் எனவும், கடந்த 18 ஆம் திகதி காலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பதுளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content