செய்தி வட அமெரிக்கா

மற்றொரு மாநிலம் டொனால்ட் டிரம்பிற்கு கதவை மூடுகிறது

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஜனாதிபதி வேட்புமனுவை இடைநிறுத்த அந்நாட்டின் மற்றுமொரு மாநிலம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் “மைனே” மாநிலம் எடுத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட அமைதியின்மையின் அடிப்படையில், அமெரிக்க அரசியலமைப்பின் விதிகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மைனே மாநில தேர்தல் பணியகம் தெரிவித்துள்ளது.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தயாராகி வருகிறார்.

இதுபோன்ற பின்னணியில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணமும் டிரம்பின் அதிபர் வேட்புமனுவை முன்னதாகவே நிறுத்தி வைத்தது.

இருப்பினும், மிச்சிகன் மற்றும் மினசோட்டா மாநில நீதிமன்றங்கள் டொனால்ட் டிரம்பின் வேட்புமனுவைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட பல நடவடிக்கைகளை நிராகரித்து வருகின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி