இலங்கையின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுப்பு!
வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் சில இடங்களில் உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
(Visited 21 times, 1 visits today)





