அவதானமாக இருக்குமாறு அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
சுற்றுலா செல்வோரை மிக மிக எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் புளோரிடா மாகாணத்திற்கு அருகில் அமைந்திருக்கும் பஹாமாஸ் தீவு நாட்டுக்கு சுற்றுலா செல்வோரை மிக மிக எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
பஹாமாஸ் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனை செய்தியில், புத்தாண்டு பிறந்தது முதல் பஹாமாஸ் நாட்டில் 18 கொலை குற்றங்கள் நடந்ததாக கூறியுள்ளது.
சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும், வழிப்பறி முயற்சி நடந்தால் எதிர்த்து போராட வேண்டாம் என்றும் அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பஹாமாஸ் தீவுக் கூட்டம் பவளப்பாறைகள் மற்றும் அறிய வகை வண்ண மீன்களை கொண்ட கண்கவர் சுற்றுலா தலம் ஆகும்.
(Visited 10 times, 1 visits today)