ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கதி…தேவாலயத்தின் வாசலில் அரங்கேறிய சோகம்!

அவுஸ்திரேலியாவில்  தேவாலயத்தின் பார்க்கிங்கில் கணவன் ஒருவர் தற்செயலாக காரை பின்புறம் நகர்த்திய போது, கார் மனைவி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தேவாலய வாகன நிறுத்துமிடத்தில் பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிட்னியின் வடமேற்கு பகுதியில் உள்ள Castle Hill Baptist தேவாலயத்தின் கார் பார்க்கிங்கில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.

70 வயதுடைய கணவர் தனது மனைவியை தேவாலயத்தின் வாசலில் இறக்கி விட்டுவிட்டு தற்செயலாக காரை பின்புறம் நகர்த்திய போது, கார் மனைவி மீது மோதி பின் அவரை ஏறி கடந்து சென்றது.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த NSW ஆம்புலன்ஸ் சேவையின் துணை மருத்துவர்கள், விபத்திற்குள்ளான பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த பெண்ணின் கணவருக்கு காயம் ஏற்படவில்லை. இருப்பினும் அவர் கட்டாய பரிசோதனைக்காக வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதையடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் விதிக்கப்படவில்லை, ஆனால் சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content