ஆசியா

வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு வீதம்; தென்கொரிய அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால் பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சியில் தென்கொரிய அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதுடன், கணவன் மற்றும் மனைவியை தேர்வு செய்ய நிகழ்ச்சி ஒன்றினையும் நடத்தியுள்ளது.

இதற்காகவே தலைநகர் சியோலுக்கு அருகில் ஒரு ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 100 தென்கொரிய ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தங்களுக்கு ஏற்ற கணவர் அல்லது மனைவியைக் கண்டுபிடிக்க ஆண்களும் பெண்களும் பங்கேற்றுள்ளனர். தென்கொரியாவில் திருமணம், குழந்தை பிறப்பு எண்ணிக்கை சரிந்துள்ளது.

குழந்தை பிறப்பு வீதம் சரிவு; கொரிய அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை! | South Korea People Government Arranged Dating

இதைச் சரிசெய்யவே இந்த நிகழ்ச்சிக்கு தென்கொரிய அரசாங்கம் ஏற்பாடு செய்தது. அதேவேளை தென்கொரியாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 0.78 விழுக்காடாகக் குறைந்தது.

இந்நிலையில் மக்கள் திருமணத்தில் இணைந்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள இத்தகைய நிகழ்ச்சிகள் போதாது என்றும் மேலும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தென் கொரிய அரசாங்கம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
See also  வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் காரணமாக 47 புலிகள் பலி!
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content