இலங்கையில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்திக்கு அருகில் இன்று காலை (11.11) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ரக வாகனமும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சாரதியும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





