பொழுதுபோக்கு

லாரன்ஸை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை….

ஒரு வருஷத்திற்கு 5 முதல் 7 படங்களாவது ராகவா லாரன்ஸ் படம் வெளியாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் சந்திரமுகி 2 படம் வெளியாகி இருந்தது. பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தனர். இதில் லாரன்ஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்திருந்த சந்திரமுகி முதல் பாகத்தின் பேரையும் சேர்த்து டேமேஜ் செய்துவிட்டனர் என்ற விமர்சனங்கள் எழந்தது.

இந்த சூழலில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் இன்று வெளியாகி இருக்கிறது. இதில் எஸ்ஜே சூர்யா, லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தீபாவளி பண்டிகைக்காக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக லாரன்ஸ் திருவெற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் சந்திரமுகி 2 படம் வெளியான போதும் இதே போல் தான் வெற்றி பெற வேண்டும் என்று கோயிலுக்கு சென்று கும்பிட்டது நினைவுக்கு வந்துள்ளது என கிண்டலடித்து கமெண்ட் செய்திருக்கிறார். சந்திரமுகி படத்தின் சோலியை முடித்தது போல் இப்போது ஜிகர்தண்டாவா என வேடிக்கையாக ப்ளூ சட்டை மாறனின் கமெண்ட் இருக்கிறது.

 

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்