கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அபாயம்!! அவசர எச்சரிக்கை விடுப்பு
அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளதால், மீட்புக் குழுக்களை உடனடி நடவடிக்கைக்கு தயார் நிலையில் வைத்திருக்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் மாவட்ட செயலாளரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (01) பகல் முழுவதும் பெய்து வரும் மழையினால் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளிலும், குறிப்பாக கம்பஹா நகரை அண்டிய பகுதிகளிலும், வத்தளை மற்றும் ஜாஎல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும்.
மேலும் அத்தனகலு ஓயாவின் இருபுறங்களிலும் உள்ள தாழ்வான நிலங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.