இலங்கை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு : சாந்தன் இலங்கை ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான சாந்தன், இலங்கை ஜனாதிபதியிடம் தாம் நாட்டிற்கு திரும்பி தனது வயதான தாயுடன் வாழ உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிய மனுவில், தாம் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அல்லது சரியான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு பிரஜைகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சாந்தன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது தனது தாயை சந்திக்க முடியாமல் போனதால், இலங்கை சென்று தனது தாயை கவனித்துக் கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கான மனுக்கள் உயர்ஸ்தானிகராலயத்தில் நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!