உலகம்

மெக்சிகோவில் தேவாலயமொன்றில் உடைந்து வீழ்ந்த மேற்கூரை – இடிபாடுகளில் சிக்கிய மக்கள்

மெக்சிகோவில் உள்ள தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்துள்ளது.

இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மெக்சிகோவின் கடலோர மாநிலமான தமௌலிபாஸில் உள்ள செண்டா குரூஸ் தேவாலயத்தின் கூரை உடைந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தேவாலயத்தின் மதிய வேளையில் இடம்பெற்ற ஞானஸ்நானத்தின் போது அந்த தேவாலயத்தின் கூரை உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

குறித்த அனர்த்தத்தில் சிக்குண்டவர்களில் பல சிறார்கள் உள்ளடங்குவதாகவும் அங்கு தொடந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்தப் பகுதியில் அவசர தேவைகள் தாமதமாக இடம்பெறுவதாக மெக்சிக்கோ தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!