ஐரோப்பா

ஸ்பெயினில் இரவு விடுதியில் தீவிபத்து : 09 பேர் பலி!

தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள முர்சியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (01.10) அதிகாலையில் டீட்டர் இரவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது என Xஇல் பதிவிடப்பட்டுள்ளது.

இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன்,  மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று முர்சியாவின் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.

தீயினால் கூரையின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ள காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   முர்சியா நகர மேயர் ஜோஸ் பலேஸ்டா, தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்