பொழுதுபோக்கு

திருமணமாகி 10 வருடத்திற்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை! அதுவும் சூரியாவுக்கு ஜோடியாம்….

நடிகர் சூர்யா, ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான, ‘சூரரை போற்று’ திரைப்படம் நாடு கடந்து பல ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

இந்த படத்திற்காக சூர்யா, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ என்ற ஃபேண்டஸி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா இந்த படத்தில் நான்கு வேடத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடித்த முடித்த பின்னர், இரண்டாவது முறையாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பிரீ புரோடக்ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

அவ்வப்போது இந்த படம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், துல்கர் சல்மான் நடிப்பதாக கூறப்படுகிறது. இவரை தொடர்ந்து, நஸ்ரியா சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

நஸ்ரியா தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, போன்ற படங்களில் நடிக்கும் போதே நயன்தாரா, சமந்தாவை போல் ஒரு கலக்கு கலக்குவார் என ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனால் அறிமுகமான சில வருடங்களிலேயே பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகினார்.

திருமணத்திற்கு பின்னர், சில வருடங்களுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கிய நஸ்ரியா, தற்போது தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கராவின் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்திலேயே துவங்கும் என கூறப்படுகிறது.

 

(Visited 11 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content