இலங்கை செய்தி

மரத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி

நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளான சம்பவம் இன்று மூதூரில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மூதூர் – நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுவனே படுகாயமடைந்துள்ளார்.

மூதூர் – நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த எஸ்.சகான் (வயது 14) தனது நண்பர்களுடன் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

காயங்களுக்குள்ளான குறித்த சிறுவன் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் இடுப்பு எலும்பு முறிவுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாவல் பழத்திற்கான பருவகாலம் என்பதால் பெற்றோர்கள் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுவது அவசியம்.

அத்துடன் பல கிராமங்களை சேர்ந்த குடும்பங்கள் பருவத்தில் காய்க்கும் கனிகளை நம்பியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றார்கள் என்பதும் இதன் விற்பனையில் சிறுவர்கள் ஈடுபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content