இலங்கை செய்தி

வெளிநாட்டு வேலைகளுக்காக இரண்டு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்

வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை இன்று ஆறு மணியளவில் இரண்டு லட்சத்து இருநூற்று இருபத்தி ஆறு என பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 311,016 பேர் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளனர்.

ஒரு வருடத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் அதிக எண்ணிக்கை இதுவாகும் என பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!