சிலியில் பயணிகள்பஸ் மீது ரெயில் மோதி கோர விபத்து – எழுவர் பலி!
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் கான்செப்சியொன் மாகாணம் சன் பெட்ரொ டி லா பாஹ நகரில் நேற்று இரவு 14 பயணிகளுடன் பஸ் சென்றுகொண்டிருந்தது.
அந்நகரின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாள கிராசிங்கை பஸ் கடக்க முயற்சித்தது. அப்போது, வேகமாக வந்த ரெயில் பஸ் மீது மோதியது. மேலும், தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ்சை வேகமாக வந்த ரெயில் சில மீட்டர்கள் தூரம் இழுத்து சென்றது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 7 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)