சூட்கேஸில் வைத்து சிறுமியை கடத்திச் சென்ற நபர்

பிலிப்பைன்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சிறுமி ஒருவர் சூட்கேஸில் கடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
8 வயது சிறுமியை சூட்கேசில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய் வீட்டில் சிறுமி இல்லாததைக் கண்டு உடனடியாக சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டுள்ளார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சூட்கேஸில் சுமந்து செல்லப்பட்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடியிருப்பாளர்களை பழிவாங்கவே சிறுமியை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)