இத்தாலிய விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் – புதன்கிழமை வரை மூடல்
இத்தாலியின் Catania நகரில் உள்ள விமான நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை தொடர்ந்து விமான நிலையம் புதன்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிறுவனம் Twitter தளத்தில் தகவல் வெளியிட்டது.
நேற்றிரவு முன்தினம் நேர்ந்த தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தற்போது அங்கு நிலவும் கடுமையான வெப்பத்துக்கும் தீச்சம்பவத்துக்கும் தொடர்புள்ளதா என்பது சரியாகத் தெரியவில்லை.
கடும் வெப்பத்தால் நேற்று கட்டேனியாவில் சிவப்பு எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டது.
(Visited 15 times, 1 visits today)