மத்திய கிழக்கு

போராளிக்குழுக்களுடன் மோதலில் ஈடுபட்ட இஸ்ரேல் – மூவர் பலி!

பாலஸ்தீன போராளிகளுடன், இஸ்ரேல் மேற்கொண்ட சண்டையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனின் நகரில் நடைபெற்ற குறித்த மோதலில்,  15 வயது சிறுவன் உட்பட மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரகிள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த சண்டையில் பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் பல மாதங்களாக வன்முறையில் சிக்கித் தவிக்கின்றனர், முக்கியமாக மேற்குக் கரையில் இந்த ஆண்டு 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனின் நகரம் பாலஸ்தீன தீவிரவாதத்தின் மையமாக இருந்து வருகிறது.

மேலும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளிக்குழுக்களுக்கு இடையிலான மோதல் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தினசரி இடம்பெறும் தாக்குதல்களால் மக்கள் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!