இலங்கை

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது தாக்குதல்!

களனியிலுள்ள இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது இனம்தெரியாத சிலர் நேற்று  (18) தாக்குதல் நடத்தியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

களனி  சரத்சந்திர டயஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில்,  வீட்டின் சொத்துக்களுக்கு சேதமேற்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து  சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரனவீர,  மே தாக்குதலின் போது ஹுணுப்பிட்டிய விலிருந்த எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

அதன் பின்னர் மாலபே பகுதியிலுள்ள என்னுடைய தந்தையின் வீட்டில் தங்கியிருந்தோம். இந்த வீடும் எனக்கு சொந்தமானது. இருப்பினும் நேற்று முன்தினம் இரவு இந்த வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக தாக்கப்பட்ட எனது வீட்டுக்கு இன்றளவிலும் நட்டயீடு வழங்கப்படவில்லை. வீட்டுக்கு வருகை தந்தவர்கள் எனது பெயரையும்,  என்னுடைய மகனுடைய பெயரையும் அழைத்து கூச்சலிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 21 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!