ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைன் ராணுவத்தில் அதிரடி மாற்றம்: புதிய தலைமைத் தளபதி நியமனம்

ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு , உக்ரைன் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக, ஜெனரல் மிகாய்லோ டிராபதி (43) உக்ரைனின் புதிய தலைமைத் தளபதியாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி நியமித்துள்ளார்.

ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு , உக்ரைன் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக, ஜெனரல் மிகாய்லோ டிராபதி (43) உக்ரைனின் புதிய தலைமைத் தளபதியாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி நியமித்துள்ளார்.

முந்தைய தலைமைத் தளபதியான 60 வயதான ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி என்பவருக்குப் பதிலாக ஜெனரல் டிராபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மரியாதைக்குரிய மற்றும் அனுபவமிக்க தளபதியான இவர், 2024 முதல் 2025 வரை உக்ரைனின் தரைப்படைப் பிரிவை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாதுகாப்பு அமைச்சரான மிகாய்லோ பெடோரோவ் திடீரென பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உக்ரைனில் வெடித்த போராட்டங்களுக்குப் பிறகே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

மேலும், போரில் வெற்றி பெற தொழில் நுட்பப் பயன்பாடே முக்கியம் என நம்பும் உக்ரைனியர்களுக்கும், பாரம்பரிய அணுகுமுறையைக் கொண்ட பழைய தலைமுறை ராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளையும் இந்த மாற்றம் வெளிப்படுத்துகிறது.
தலைப்புகள் சில தரவும்

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி