ஸ்டாமரின் சொத்துக்களுக்கு தீவைப்பு!! குற்றவாளிகள் பொலிஸ் காவலில்!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரின் வீடு மற்றும் கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு தீவைத்த ரோமன் லவ்ரினோவிச் (Roman Lavrynovych) மற்றும் ஸ்டானிஸ்லாவ் கார்பியூக் (Stanislav Carpiuc) ஆகிய இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் அதுவரை பொலிஸ் காவலில் வைக்கப்படுவார்கள் என ஓல்ட் பெய்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள், ‘எல் மனி’ என்று அறியப்பட்ட, ரஷ்ய மொழி பேசும் நபர் ஒருவரால் திட்டமிடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி தீவைப்பு சம்பவத்திற்காக ரஷ்ய நபர் லவ்ரினோவிச்சிற்கு 3000 பவுண்ட்ஸ்களை கிரிப்டோகரன்சியாக வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த லண்டன் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் ‘அரச அச்சுறுத்தல்’ இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.





