இலங்கை

கடனுக்க மேல் கடன் வாங்கிய அரசாங்கம்! இரண்டரை வருடத்தில் இவ்வளவா?

#SriLanka #PresidentAKD #NewYear2026 #SriLankaNews #ReformLanka #AnuraKumaraDissanayake

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 1,854 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளது  தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பணவியல் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு இந்த தகவலை வெளியிப்படுத்தியுள்ளது.

அதன்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கும் இந்த ஆண்டு மே 5ஆம் திகதிககும் இடைப்பட்ட காலத்தில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மொத்தமாக 1,854.77 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட 18 திட்டங்கள் தொடர்பாக இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பலதரப்புக் கடன்கள் மற்றும் இருதரப்புக் கடன்கள் அடங்கும்.

இந்தக் கடன்கள் ஜப்பான், கொரியா, சவூதி அரேபியா, நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை இதுவரை 102.02 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெற்றுள்ளது என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்