தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக போராட்டம் – UK பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!
பிரித்தானியாவில் பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பிய 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் வூல்விச் கிரவுன் நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்றுக்கூடி போராட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட பிரித்தானியாவில் இயங்கிவரும் தொழிற்சாலையொன்றில் கடந்த 2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்காக நான்கு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாகவே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




